Followers

Monday, October 24, 2016

கர்மவினை


ணக்கம்!
          நட்சத்திரபரிகாரத்தில் ராகுவுக்கு என்று ஒரு சில நபர்கள் தொடர்புக்கொள்வார்கள். இதற்கு அதிகபட்சம் வருபவர்கள் தொடர்புக்கொள்வார்களே தவிர அவர்கள் என்னை சந்திக்க கூட முடியாது.

கர்மவினை அவர்களை தடுத்துவிடுகிறது. பெரிய பரிகாரத்திற்க்கு வருபவர்கள் அதிகபட்சம் வருவார்களே தவிர அதனை செய்ய அவர்களால் முடியாது.

இன்றைக்கு இப்படிப்பட்ட பூஜைகள் எல்லாம் நிறைய செய்கிறேன். இதற்கு வரும் நபர்கள் அதிகபட்சம் ஜாதககதம்பம் படிப்பவர்கள் கிடையாது. விலை உயர்ந்த சொகுசுகார்களுக்கு எல்லாம் டிவியில் விளம்பரம் செய்வது கிடையாது ஏன் என்றால் அவர்கள் எல்லாம் டிவியை பார்ப்பவர்கள் கிடையாது. 

இதனை சொகுசுகார்கள் விற்க்கும் நபர்கள் தெரிந்துவைத்திருக்கார்கள் அதுபோல நானும் தெரிந்து வைத்திருக்கிறேன். யார் யார் இதற்கு வருவார்கள் என்பது எனக்கு நன்றாக தெரியும்.

இதனை செய்பவர்கள் கண்டிப்பாக எனது ஊருக்கு காரை அனுப்பி என்னை அழைத்துக்கொண்டு சென்று பேசிவிட்டு அதற்கு ஏற்பாடு செய்வார்கள் என்பது எனக்கு நன்றாக தெரியும்.

ஜாதககதம்பத்தில் வருபவர்கள் இன்னமும் அந்த நிலையை எட்டவில்லை என்பது எனக்கு தெரியும். இவர்கள் போல் நீங்கள் மாறும்பொழுது நீங்கள் என்னை விடமாட்டீர்கள். ஏதோ ஒரு பெரிய விசயம் இருக்கின்றது என்பது மட்டும் உங்களுக்கு சொல்ல இந்த பதிவை எழுதினேன். கொஞ்சம் சிந்தித்து பார்த்தால் நீங்களும் அந்த நிலைக்கு வரலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: