Followers

Wednesday, October 19, 2016

புதன் தசா கேது புத்தி


ணக்கம்!
         புதன் தசா கேது புத்தி ஒருவருக்கு நடந்தது. கேது புத்தி என்பதால் கொஞ்சம் ஆட்டிபடைத்தார் என்று சொல்லாம். புதனைப்பொறுத்தவரை அது எந்த கிரகத்தின் புத்தி என்றாலும் அது போல மாறி கொடுக்க ஆரம்பிக்கும். இது ஒரு பெரிய சிக்கல்.

கேது புத்தி என்றவுடன் அவருக்கு கண் சம்பந்தப்பட்ட பிரச்சினை உருவாகியது. அவர் பல மருத்துவமனையை ஏறி பார்த்தார் ஆனாலும் எதாவது ஒரு கண் பிரச்சினை வந்துக்கொண்டே இருந்தது. அவரின் மனைவி ஒரு நாள் என்னிடம் தொடர்புக்கொண்டு அவரின் ஜாதகத்தை காண்பித்து காண்பித்தார்.

தசாநாதனுக்கு ஆறாவது வீட்டில் கேது இருந்து புத்தியை நடத்திக்கொண்டு இருந்தது. உடனே நான் அவருக்கு நோய் சம்பந்தப்பட்ட பிரச்சினை இருக்கின்றது என்றேன். அவரும் அதனை ஏற்றக்கொண்டு இதனை சொன்னார்.

புதன் கிரகத்திற்க்கு என்று தனிப்பட்ட இயல்பு இல்லாமல் ஆறாவது வீட்டில் இருந்த கேதுவின் புத்தி என்பதால் அதுபோல தன்பலனை கொடுக்க ஆரம்பித்த காரணத்தால் இந்த பிரச்சினை அவருக்கு கொடுத்தது.

புதன் கிரகத்திற்க்கு ஒரு சரியான பரிகாரம் மற்றும் ஒரு தெய்வத்திற்க்கு கண்மலர் வாங்கி வைத்துவிடுங்கள் என்று சொன்னேன். பல கோவில்களில் கண்மலர் வாங்கிகொடுப்பது உண்டு இதனை செய்ய சொன்னேன். கொஞ்ச நாளில் அவருக்கு ஏற்பட்ட பிரச்சினை குறைந்தது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: