Followers

Thursday, October 6, 2016

குரு


வணக்கம்!
          இன்றைக்கு இருக்கும் நவீன உலகத்தில் அனைத்து ஆன்மீக கலையும் வெளியில் கொட்டிகிடக்கிறது அதனை அனைவரும் படிக்கிறார்கள் ஆனால் அனைவரும் ஆன்மீகவாதிகளாக மாறமுடிவதில்லை. ஏன் என்று பார்த்தால் அதற்கு காரணம் ஒன்றே ஒன்று தான் அது குரு கிடையாது என்பது மட்டுமே.

எந்த ஒரு வித்தையும் சரி குரு இல்லை என்றால் அது பாழ் தான். ஒரு குரு என்பவர் கிடைப்பதில்லை அதனால் தான் அனைத்து வித்தையும் வீணாக கிடக்கிறது. 

ஒருவருக்கு குரு கிரகம் நன்றாக இருந்தால் எப்படியும் ஒரு குரு உங்களுக்கு கிடைத்துவிடுவார். குரு கிரகம் சரியில்லை என்றால் குரு கிடைப்பது அரிதான ஒன்று.

ஜாதகத்தில் குரு கிரகம் நன்றாக இருப்பது போல தோன்றும் அப்படி இருந்தும் குரு கிரகம் கிடைக்காமல் போவதற்க்கு குரு கிரகத்தின் முழுமையான பலன் கிடைக்காமல் போவதால் தான் அப்படி குரு ஒருவர் அமைவதில்லை.

குரு கிரகம் நன்றாக இருந்தும் ஒரு சிலருக்கு பாக்கியஸ்தான அதிபதி சரியாக இல்லை என்றாலும் குரு கிடைக்கமாட்டார். குரு கிரகம் நன்றாக இருந்தால் அவர்க்கு குரு கிடைப்பார் பாக்கியஸ்தானஅதிபதி சரியில்லை என்றால் கிடைத்த குரு நீண்ட நாள்களுக்கு உங்களோடு இருக்கமாட்டார்.

பாக்கியஸ்தான அதிபதியும் குருவும் நன்றாக அமைந்துவிட்டால் நீங்கள் அனைத்து வித்தையும் கற்று அதில் தேறிவிடலாம். இரண்டையும் சரி செய்வதற்க்கு நிறைய ஆலயங்களை தரிசனம் செய்துவிட்டு வாருங்கள். 


அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: