Followers

Thursday, October 27, 2016

குரு தோஷம்


ணக்கம்!
          குரு ஒரு சுபக்கிரகம் என்று தெரியும். ஐந்தாம் வீடு மற்றும் ஒன்பதாவது வீட்டிற்க்கு காரகம் ஆவார். பூர்வபுண்ணியவீடு மற்றும் பாக்கியஸ்தான அதிபதி வீடு இரண்டிற்க்கு காரகம் வகிக்கிறார்.

சுபக்கிரகம் என்றவுடன் அதன் வழியாக நிறைய நன்மை நடக்கவாய்ப்பு அதிகம் இருக்கின்றது. ஒரு சிலர்க்கு குரு கிரகம் மறைவு ஸ்தானத்திற்க்கு சென்றுவிடும் அல்லது குரு கிரகம் பாவிகளோடு சேர்ந்து நன்மை தராது. இது ஒரு தோஷமாக கருதிக்கொள்ளவேண்டும்.

இந்த தோஷம் விலகுவதற்க்கு பாக்கியஸ்தான அதிபதியின் பார்வை குருவிற்க்கு கிடைத்தால் இது தோஷமாக நீங்கள் கருதிக்கொள்ளதேவையில்லை. தோஷம் தீர்ந்துவிடும் குருவின் முழுபலனையும் நீங்கள் அனுபவிக்கலாம்.

பாக்கியஸ்தான அதிபதியாக வரும் கிரகத்தின் பார்வை பட்டாலும் தீரும் அல்லது பாக்கியஸ்தான அதிபதியோடு சேர்ந்து இருந்தாலும் இந்த தோஷம் தீரும்.

பாக்கியஸ்தான அதிபதி பார்வை படவில்லை அல்லது சேர்ந்து இல்லை என்றால் கவலைபடதேவையில்லை அது கோச்சாரபடி வரும் காலத்தில் அந்த காலத்தில் அந்த தோஷம் நீங்கும் அல்லது பாக்கியஸ்தான அதிபதி யார் என்று பார்த்து வணங்கி வாருங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: