Followers

Wednesday, October 12, 2016

குலதெய்வம்


ணக்கம்!
          குலதெய்வத்தைபற்றி நிறைய எழுதியுள்ளேன். ஜாதககதம்பத்தில் குலதெய்வத்தைப்பற்றி எழுதிய தகவல் எந்த தேதி என்று பார்த்து அந்த தேதிக்கு பிறகு தான் பல தளங்களில் குலதெய்வத்தின் தகவல்கள் வந்திருக்கும். எண்பது சதவீத கருத்து குலதெய்வத்தைப்பற்றிய தகவல் ஜாதககதம்பத்தில் இருந்து தான் எடுத்து எழுதப்பட்டு இருக்கும்.

குலதெய்வத்தை பற்றி அனைவருக்கும் போய் சேர்ந்தால் நல்லது தான் என்று நானும் இருந்துவிட்டேன். இந்த குலதெய்வத்தின் கருத்தை எடுத்து ஒவ்வொரு சாதியினரும் பரப்பினார்கள் இன்றைய தேதி வரை அதனை பரப்பிக்கொண்டு தான் இருக்கின்றனர். அதாவது தன் சாதியை கோப்பாக வைத்துக்கொள்ள ஒவ்வொருவரும் கையாண்ட ஒரு யுக்தி தான் இது.

குலதெய்வ வழிபாடு தனிமனிதன் மேம்படவேண்டும் என்பதற்க்காக எழுதினால் அது எங்கு எல்லாம் தற்பொழுது பயன்படுகிறது என்பதை பார்த்தால் தான் தெரிகிறது. கலியுக மனிதன் அல்லவா அப்படிதான் இருப்பான்.

இன்றைக்கு நான் சொல்லவேண்டிய கருத்தை எல்லாம் மேம்பாேக்காக சொல்லுவது கூட பதிவு கருத்தை எடுத்து அவர் அவர்களின் முகநூலில் ஏதோ ஒன்றில் வெளியிடுகிறார்கள் என்பதற்க்காக நிறைய கருத்தை சொல்லலாமல் விட்டு இருக்கிறேன்.

என்னை சந்திக்கும்பொழுது தான் மிக மிக முக்கியமான கருத்தை நமது நண்பர்களுக்கு எல்லாம் சொல்லுவது உண்டு. ஒவ்வொருவரும் என்னை சந்தித்துவிடுங்கள் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

குலதெய்வம் தெரியாமல் நிறைய நண்பர்கள் கஷ்டப்பட்டு இருப்பதும் தெரியவந்தது. உங்களால் முடிந்த முயற்சியை நீங்கள் போட்டுவிட்டீர்கள் கிடைக்கவில்லை என்றால் என்ன செய்வது இருக்கின்ற தெய்வத்தை வணங்கிக்கொண்டு செல்லவேண்டியது. குலதெய்வம் தெரியவில்லை என்றால் கஷ்டப்படவேண்டாம். உங்களுக்கு தெரிந்த தெய்வத்தை வணங்கிக்கொண்டு இருங்கள் அது போதும்.

எதனை செய்தாலும் சரி அந்த விசயத்தை தொடர்ந்து கடைபிடித்து வாருங்கள். தொடர்ந்து கடைபிடித்து வந்தால் உங்களுக்கு அது வெற்றியை தந்துவிடும் என்பது மட்டும் உண்மை.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: