Followers

Monday, October 31, 2016

கஜகேசரி யோகம்


ணக்கம்!
          சந்திரனுக்கு 1 4 7 10 ல் குரு நின்றால் கஜகேசரி யோகம் எனப்படும். குருபகவான் சந்திரன் இணைந்து மிகப்பெரிய யோகத்தை கொடுக்கும் என்பது மட்டும் உண்மை. சந்திரனுக்கு 1 4 7 10 ல் நின்றாலும் கஜகேசரி யோகம் என்பார்கள் இதிலும் நன்மையை அளிக்கும்.

தரித்திர நிலையில் ஒரு குடும்பம் இருந்து அந்த குடும்பத்தில் ஒரு குழந்தை பிறந்தால் அந்த குழந்தைக்கு கஜகேசரி யோகம் இருந்தால் அந்த குழந்தையின் ஜாதகத்தால் அந்த குடும்பம் கோடிஸ்வரர் குடும்பமாக மாறிவிடும். அந்தளவுக்கு யோகத்தை வழங்ககூடிய அமைப்பு கஜகேசரி யோகத்திற்க்கு உண்டு.

ஒரு குடும்பம் வறுமையில் இருக்கின்றது என்றாலே அந்த குடும்பத்திற்க்கு ஏகப்பட்ட தோஷம் இருக்கின்றது என்று தான் அர்த்தம். இந்த தோஷத்தை எல்லாம் போக்கி தான் அந்த குடும்பத்திற்க்கு செல்வ செழிப்பை கொடுக்கிறது.

பாவத்தை போக்கும் தன்மை இந்த கஜகேசரி யோகத்திற்க்கு உண்டு என்பது மட்டும் உண்மை. ஒருவருக்கு கஜகேசரியோகம் இருந்தால் கோச்சாரபடி வரும் தீமைகள் கூட வருவதில்லை. தீமைகள் நடக்காமல் நல்லதை மட்டும் தரக்கூடிய அமைப்பு என்று இதனை சொல்லலாம்.

சோதிடத்தில் கூட சொல்லுவார்கள் விதியை மாற்றும் வல்லமை உடையவர் குரு பகவான் என்பார்கள். வாழ்க்கையில் ஏற்படும் வறுமை சஞ்சலத்தை நீக்கி நன்மையை தருபவர் குரு. இவர் சந்திரனோடு இணையும்பொழுது அல்லது மேற்கண்டு சொன்ன இடத்தில் நிற்க்கும்பொழுது நல்ல பலனை அனுபவிக்கலாம்.

குருபகவான் கொடுக்கிறார் என்றாலும் சந்திரன் அதனை பெற்று கொடுக்கவேண்டும் என்பது தான் விதி. சந்திரனை வைத்து தான் இந்த யோகமே இருக்கின்றது அல்லவா. சந்திரனும் மிக மிக முக்கியம்.

செவ்வாய் பரிகாரம் சென்றுக்கொண்டு இருக்கின்றது. நமது தளத்தில் வரும் நண்பர்கள் செவ்வாய் கிரக பாதிப்பு இருந்து அதற்கு பரிகாரம் செய்யவேண்டும் என்றால் தொடர்புக்கொள்ளலாம்.

கோயம்புத்தூர் வருவதாக ஒரு திட்டம் இருக்கின்றது. கோயம்புத்தூர் திருப்பூர் பகுதியில் உள்ள நண்பர்கள் சந்திப்பதாக இருந்தால் தொடர்புக்கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: