Followers

Tuesday, October 25, 2016

செவ்வாய் ஆன்மீகபார்வை


வணக்கம்!
          அக்னி தத்துவம் ஆத்மாவில் இருக்கின்றது அதே அக்னி தத்துவத்தை உடைய கிரகம் சூரியன் என்று சொல்லுவதை விட செவ்வாய் தான் காரகம் என்று சொல்லுவார்கள். ஆத்மாவில் உள்ள வெப்பத்தை காட்டுவதும் இந்த செவ்வாய்கிரகம் தான் என்று குரு சொல்லுவார்.

ஒருவருக்கு செவ்வாய் கிரகம் நன்றாக இருந்தால் அவரின் ஆத்மா நல்ல பலத்தோடு இருக்கின்றது என்று அர்த்தம். செவ்வாய் கிரகம் பலம் குன்றி இருந்தால் ஆத்மாவின் பலமும் குறைவு தான். இது எல்லாம் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட ஒன்று சோதிடத்தில் வராது. நீங்களும் தெரிந்துக்கொள்ளுங்கள் என்று தான் இதனை சொன்னேன்.

உங்களின் ஜாதகத்தில் செவ்வாய் கிரகம் பலம் குறையும்பொழுது உங்களின் உடலும் வலுகுறைவாக தான் இருக்கும். பலம் அதிகமாக இருந்தால் செவ்வாய் நன்றாக இருக்கின்றது என்று அர்த்தம். 

ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் கிரகம் சரியில்லை என்றால் சனிக்கிரகத்தின் ஆட்டம் அதிகமாக இருக்கும். சனிக்கிரகம் ஜாதகரை தன் இஷ்டத்திற்க்கு வைத்துவிடும். சனியின் வீரியத்தை குறைப்பதவ்றக்கு செவ்வாய் கிரகம் பலம் ஜாதகத்தில் தேவைப்படுகின்றது.

செவ்வாய் பலம் குறைவாக இருந்தால் உடலில் அவ்வப்பொழுது நீர்கோர்வையும் வருகின்றது. சனியின் ஆட்டம் அதிகரிப்பதால் இது நடைபெறுகின்றது அதனால் செவ்வாயின் கிரகத்தின் பலமும் நமக்கு தேவை தான்.

ஒரு சில ஜாதகத்தில் இரண்டு கிரகமும் அடிப்பட்டு இருக்கும். அவர்களின் நிலை மிக மிக கொடுமை தான். இன்னும் நிறைய தகவல்கள் இருக்கின்றன அதனை எல்லாம் வரும் பதிவுகளில் பார்க்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: