Followers

Thursday, November 10, 2016

விதியை மாற்றும் தர்மம்

ணக்கம்!
          படைக்கும் பிரம்மனின் விதியை மாற்றும் வலிமை தர்மத்திற்க்கு உண்டு என்று கிருஷ்ணன் சொல்லியுள்ளார். கர்ணன் மீது அர்ச்சுணன் வில்லை விடும்பொழுது அவன் மேல் பூமாதிரி விழுகிறது அல்லவா அவன் உயிரை எடுக்கமுடியவில்லை அதற்கு காரணம் அவன் செய்த தர்மம். இதனை ஏன் உங்களிடம் சொல்லுகிறேன் என்றால் ஒருவன் தர்மம் செய்தால் விதியை மாற்றலாம் என்பது உண்மை என்பதற்க்காக சொல்லுகிறேன்.

செவ்வாய் பரிகாரம் செய்யும்பொழுது நண்பர் ஒருவர் சொல்லிருந்தார். ஏன் கோவிலுக்கு கொடுக்கிறீர்கள் அதனை நமது இராணவத்தில் அடிப்பட்டவர்களுக்கு மருத்துவ செலவுக்கு கொடுக்கலாம் என்று சொல்லி அதற்குரிய இணைய இணைப்பையும் கொடுத்து இருந்தார். அதனை நான் அந்த நேரத்தில் வெளியிடவில்லை.

செவ்வாய் பரிகாரம் செய்யும்பொழுது அது கோவிலுக்கு செய்தால் தான் உடனே பலன் கிடைக்கும் என்பதால் அதனைப்பற்றி சொல்லவில்லை. முதலில் நம்மை சரிசெய்துக்கொண்டு அதன்பிறகு நாட்டிற்க்கு கொடுக்கலாம். கோவிலில் செய்யும்பொழுது உடனே அந்த பலனை பெறமுடியும் என்பதால் கோவிலுக்கு செய்யுங்கள் என்று சொன்னேன்.

நண்பர் இராணுவ வீரர்களுக்கு மருத்துவசெலவிற்க்கு என்று சொன்னது கூட செவ்வாய் காரகதன்மை உடையது என்றும் சொல்லிருந்தார். அதனை ஏற்றுக்கொள்கிறேன். அதே நேரத்தில் ஒரு விசயத்தை நன்றாக கவனியுங்கள். ஒருவர் சண்டை போடுகிறார் என்றால் அவர்க்கு நீங்கள் உதவி செய்கிறேன் என்றால் பிரமஹத்தி தோஷம் பிடிக்கும் என்பது இங்கு சொல்லி ஆகவேண்டும். 

இந்தியாவில் உள்ள இராணுவமும் மனித உயிர் தான். பாகிஸ்தானில் உள்ள இராணுவமும் மனித உயிர்தான். ஒரு ஆன்மீகவாதிக்கு இரண்டையும் வேறுபடுத்தி பார்க்ககூடாது. மனித உயிர் என்பது மட்டும் தான் அவனுக்கு தெரியவேண்டும். 

சண்டை போடுபவர்களுக்கு உதவி செய்யவேண்டாம். முதலில் நாம் கோவிலில் பூஜை நடப்பதற்க்கு உதவி செய்வோம் அதன் வழியாக நமது வாழ்க்கை மேம்பட்டவுடன். அடுத்த உதவி எல்லாம் நாம் பார்த்துக்கொள்ளலாம்.

தர்மம் செய்வது கூட நல்லது தான் ஆனால் அதனை பாத்திரம் அறிந்து பிச்சை இடு என்றும் சொல்லியுள்ளார்கள் அல்லவா. அதனை கடைபிடிப்பதும் அவசியம்.

மதியம் 1 மணி பதிவில்

மாமியார் வீட்டில் மரியாதை எப்படி?

அடுத்த வாரத்தில் காேயம்புத்தூர் மற்றும் திருப்பூரில் என்னை சந்திக்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: