Followers

Tuesday, November 15, 2016

பரிகாரம்


ணக்கம்!
          நமது நண்பர்கள் இன்று இல்லை என்றாலும் எதிர்காலத்தில் எப்படியும் ஒரு சோதிடர்களாக இருப்பார்கள். ஏன் இன்றைய காலத்தில் கூட இதனை செய்துக்கொண்டு வரலாம். பரிகாரம் என்ற ஒன்றை செய்யும்பொழுது கவனிக்க வேண்டிய ஒன்று தான் இந்த பதிவு.

சோதிடர்களாக இருந்தாலே பரிகாரத்தை சொன்னால் தான் உங்களை சோதிடர்களாக மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். பரிகாரம் சொல்லவில்லை என்றால் அந்தளவுக்கு மக்கள் ஏற்றுக்கொள்வதில்லை. 

சோதிடர்கள் பரிகாரத்தை செய்தும் கொடுப்பது உண்டு  அல்லவா. இலவச பரிகாரம் செய்யகூடாது என்பது எனது அனுபவம். நான் நிறைய பேருக்கு இலவச பரிகாரம் செய்துக்கொடுத்து இருக்கிறேன். முக்கால்வாசி பேருக்கு இலவச பரிகாரம் தான் செய்துக்கொண்டு இருந்தேன்.

இலவசமாக செய்யும்பொழுது அவர்களின் கர்மா நம்மை தாக்குகிறது என்பதை அனுபவத்திலும் உணர்ந்து இருக்கிறேன். இலவசமாக செய்தாலும் அவர்களிடம் ஏதாவது பணத்தை வாங்கி ஏதோ ஒரு கோவிலுக்கு செய்துவிட்டு அவர்களுக்கு செய்யுங்கள்.

ஒன்றை கவனிக்கவேண்டும் அதாவது நாம் செய்வது சோதிட தொழில் தவிர வேறு எந்த ஒரு தொழிலையும் நாம் செய்யகூடாது என்பது தான் முக்கியமாக கவனிக்க வேண்டியது. தனியா வேறு தொழில் செய்தாலும் முதன்மை தொழிலாக சோதிடம் ஆன்மீகம் சம்பந்தப்பட்டவையாக இருக்கவேண்டும். 

ஏன் இதனை சொல்லுகிறேன் என்றால் முதன்மை தொழிலாக இதனை செய்யும்பொழுது மட்டுமே நீங்கள் பரிகாரம் செய்யும்பொழுது அந்த பரிகாரம் வேலை செய்யும்.

இன்றைக்கு இருக்கும் அனைத்து தொழில்களும் சரி அவர்களின் ராசி வேலை செய்கிறது. அவர்களிடம் சென்றாலே அந்த வேலை நடக்கும் என்பதின் தாரகமந்திரம் அது தான். ஒரு டாக்டரிடம் செல்லும்பொழுது அவரின் ராசி முக்கால்வாசி வேலை செய்யும் அதன் பிறகு தான் அவர்களின் தொழில் திறமை.

முதன்மையாக இந்த தொழிலை செய்தால் கண்டிப்பாக நீங்கள் செய்யும் பரிகாரம் வேலை செய்யும். இது என்னுடைய அனுபவத்தில் சொல்லுகிறேன்.

நாளை கோயம்புத்தூர் மற்றும் திருப்பூரில் என்னை சந்திக்கலாம். சந்திக்க விரும்பும் நண்பர்கள் என்னை தொடர்புக்கொள்ளவும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: