Followers

Thursday, November 17, 2016

குரு கடினம்


வணக்கம்!
          இன்றைக்கு இருக்கும் கலியுககாலத்தில் ஒரு வித்தையை குரு சொல்லிக்கொடுத்துக்கொண்டு இருக்கும்பொழுதே அதனை லைவ்வாக வெளியில் காட்டிவிடுவார்கள். ஒரு குருவிற்க்கு உண்மையான சீடன் என்பவன் கிடைப்பது அரிது என்று சொல்லுகிறேன்.

குரு காரத்துவம் உடைய வேலை எல்லாம் தற்பொழுது முடங்கிக்கொண்டு வருகிறது என்று நினைக்கிறேன். அனைத்தும் தீயகிரகங்களின் கைக்கு போய்விட்டது என்று நம்ப தோன்றுகிறது. குரு கிரகத்தின் காரத்துவம் உடையவராக வாழ்வது என்பது அந்தளவுக்கு ஒரு எளிமையான விசயம் கிடையாது என்றே சொல்லாம்.

நிறைய பேர் குருவின் தசாவில் பிரபலமாக இருக்கின்றார்கள். அவர்களின் ஜாதகத்தை பார்த்தாலும் குரு கிரகம் கெட்டு ஏதாவது மறைவிடத்தில் இருக்கின்றது. மறைவிடத்தில் இருந்தாலும் அவர்கள் பிரபலமாக இருப்பதற்க்கு காரணம் அவர்கள் செய்யும் தொழிலும் மறைமுகமாக இருப்பதால் தான் பிரபலமாக இருக்கின்றனர்.

குருவின் காரத்துவத்தோடு ஒருவர் இந்த உலகத்தில் வாழ்வது என்பது அவ்வளவு கடினமான ஒரு வேலை. அப்படி இருந்து அரிதாக எங்கோ ஒரு முலையில் ஒருவர் கண்டிப்பாக வாழ்ந்துக்கொண்டு தான் வருகிறார் என்றும் தெரிகிறது. அதாவது அப்படிப்பட்டவர்கள் வெளியில் தன்னை காட்டிக்கொள்வதே கிடையாது.

வெளிஉலகத்தில் தன்னை காட்டிக்கொண்டு குருவின் காரத்துவத்தோடு வாழ்வது என்பது கடினம் தான். அப்படி வாழ்ந்தால் கண்டிப்பாக அது மோட்சத்தை கொடுக்கும். மோட்சம் யாருக்கு வேணும் பணம் தான் வேணும் என்று இருப்பவர்கள் குருவின் மறைவிடத்தில் இருந்து பலனை கொடுத்தால் எப்படி நடக்கும் என்பதை பார்த்து அதற்கு தகுந்தமாதிரி தன்னை மாற்றிக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: