Followers

Sunday, November 20, 2016

பூர்வபுண்ணியமும் ராகுவும்


வணக்கம்!
          இன்றைக்கு பல பேருக்கு குலதெய்வம் தெரியாமல் போனாதற்க்கும் இராகு கிரகம் காரணமாக இருக்கின்றது. ராகு கிரகம் ஐந்தில் அமர்ந்து உங்களை பூர்வபுண்ணியத்தோடு ஒட்டவிடாமல் செய்கிறது.

பூர்வபுண்ணியத்தை காலிசெய்யவேண்டிய ஒரு அமைப்பை ராகு கிரகம் வழங்கும் அது ஐந்தில் தான் நிற்கவேண்டும் என்பதில்லை எக்குதப்பாக உங்களின் ஜாதகத்தில் ராகு கிரகம் அமைந்தால் அது உங்களை உங்களின் பூர்வபுண்ணியத்தில் இருந்து விரட்டிவிடும்.

ராகு கிரகம் உங்களை பூர்வபுண்ணியத்தில் உள்ளவர்களை தொடர்புக்கொள்ளமுடியாமல் செய்து உங்களின் குலதெய்வத்தை தெரிந்துக்கொள்ள முடியாதபடி செய்துவிடும். ஏற்கனவே உங்களின் பெற்றோர்க்கு இந்த அமைப்பு இருந்த அவரை அங்கிருந்து துரத்தி தற்பொழுது உங்களுக்கு பிரச்சினையாக அமைந்து இருக்கும்.

உங்களின் வாரிசுகள் நன்றாக இருக்கட்டும் என்பதற்காகவும் உங்களின் குடும்ப உறவுகள் சிறப்பாக அமையவும் ராகு கேதுவை சாந்தப்படுத்தலாம்.

ராகு கிரகத்திற்க்கு தற்பொழுது ஒரு பரிகாரத்தை செய்துவிடுங்கள் அதன்பிறகு ஒரு நல்ல மாற்றம் உங்களின் வாழ்க்கையில் நடக்கும் என்பதை உறுதியாக சொல்லலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: