Followers

Monday, November 21, 2016

சந்திரன்


வணக்கம்!
          கோயம்புத்தூர் விசிட் முடித்துவிட்டு இன்று மதியம் தஞ்சாவூர் வந்தடைந்தேன். தொடர் பயணம் கொஞ்சம் ஒய்வு எடுத்துக்கொண்டு தற்பொழுது பதிவை எழுத ஆரம்பித்தேன்.

நமது சோதிடத்தில் சந்திரன் மிக மிக முக்கியபங்கு வகிக்கிறது என்று சொல்லிருக்கிறேன். பலர் அதனை அலட்சியமாக கருதிக்கொண்டு இருக்கின்றனர். பலருக்கு என்னுடைய அனுபவத்தை நான் பகிர்ந்து இருக்கிறேன். சந்திரன் தான் முக்கியம் என்று சொல்லிருக்கிறேன். அவர்களின் வாழ்க்கையோடு அதனை ஒப்பிட்டு சரி தான் என்று சொல்லிருக்கிறார்கள்.

ஒவ்வொருவரும் கெடுவது சந்திரனால் தான் என்று சொல்லிருக்கிறேன். உங்களின் ஜாதகத்தில் சந்திரன் எப்படி இருக்கிறது என்று பாருங்கள். அது இருப்பதற்க்கு தகுந்தபடி தான் பலனையும் கொடுக்கும் என்று சொல்லிருக்கிறேன். உங்களின் ஜாதகத்திலும் சந்திரன் எப்படி இருக்கிறது என்று பாருங்கள்.

சந்திரன் ஆட்சி என்று சொல்லக்கூடிய கடகராசியினர் தற்பொழுது நிறைய சிக்கலில் மாட்டிக்கொண்டு இருக்கின்றனர். கடகராசியினர்க்கு நிறைய செலவு மற்றும் மருத்துவசெலவும் வைத்திருக்கிறது. அவர்கள் அவர்களின் ஜாதகத்தை என்னிடம் காட்டிவிட்டு அதற்கு வழியை பெற்றுக்கொள்ளுங்கள்.

இன்று கார்த்திகை சோமவாரம் ஆரம்பம் ஆனது. சிவவழிபாடு செய்வதற்க்கு கார்த்திகை மாதம் சிறந்த நாள். இந்த வார திங்கள்கிழமை செய்யமுடியாதவர்கள் அடுத்த வாரத்தில் இருந்து துவங்குங்கள்.

சந்திரன் பிரச்சினை என்று இருப்பவர்கள் திங்கள்கிழமை தோறும் அருகில் இருக்கும் சிவ ஆலயம் சென்று தரிசனம் செய்துவிட்டு வாருங்கள். பல ஊர்களில் சோமவாரம் விரதம் இருப்பார்கள். சந்திரனுக்காகவும் விரதம் இருக்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: