Followers

Saturday, November 19, 2016

சனியும் கருப்புபணமும்


ணக்கம்!
          நமது நாடு இருக்கும் ராசி மகரராசி என்று சொல்லுவார்கள். மகரராசியை வைத்து பார்த்தால் ஒரளவு சரியாக தான் இந்தியாவிற்க்கு பொருந்துகிறது.

நமது ஆட்கள் பெரும்பாலும் வெளிநாடுகளில் வேலை செய்கின்றனர். இவர்கள் அனுப்பும் பணம் அனைத்தும் முறையான வழியில் வருவதில்லை என்பது பலருக்கும் தெரியும்.

அரசியல்வாதிகள் கருப்புபணம் வைத்திருக்கின்றனர் என்று சொல்லுகிறார்கள் அல்லவா. தனவீடு சனியாக இருக்கும்பொழுது பெரும்பாலும் கருப்புபணமாக இருப்பதற்க்கு வாய்ப்பு அதிகம் என்றே சொல்லலாம்.

ஒருவரிடம் கருப்புபணம் இருப்பதற்க்கு சோதிடத்தில் நான்காவது வீட்டை வைத்து சொல்லுவார்கள். நான்காவது வீட்டில் சனி சம்பந்தப்பட்டால் அவரிடம் கருப்புபணம் இருக்கின்றது என்பார்கள். பணம் வருவதே கருப்புபணமாக இருந்தால் இருக்கின்ற பணமும் கருப்புபணமாக தான் இருக்கும்.

சனி ஒரு நாட்டில் அதிகம் சம்பந்தப்பட்டால் அதிகமாக இப்படி பதுக்கி வைக்கும் சம்பவம் எல்லாம் நடைபெறுவது இயற்கை. நான் நாட்டிற்க்காக இதனை சொல்லவில்லை. சனியின் தன்மை இப்படிப்பட்டது என்பதற்க்காக சொன்னேன்.

மேலே சொன்ன மாதிரி சனி எனக்கு இருக்கிறது ஆனால் பணம் இல்லை என்று சொல்லுபவர்களுக்கு ஒன்றை சொல்லுகிறேன். உங்களுக்கு சனிக்கிரகம் பாதகமாக வேலை செய்கிறது என்று அர்த்தம்.

ஒரு சில பணமுதலைகள் என்று சொல்லுபவர்களின் ஜாதகத்தை நான் பார்த்து இருக்கிறேன். அவர்களின் ஜாதகத்தில் இப்படிப்பட்ட அமைப்பு இருக்கின்றது. 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: