Followers

Saturday, November 5, 2016

சூரசம்ஹாரம்


வணக்கம்!
          இன்று சூரசம்ஹாரம் நமது ஜாதககதம்பத்தின் நண்பர்களால் பல கோவில்களில் இந்த விழாவிற்க்கு என்று காணிக்கை செலுத்தியுள்ளோம். சுவாக மிமலையில் அன்னதானத்திற்க்கு என்று ஏற்பாடு செய்யபட்டுள்ளது. பல முருகன் கோவில்களில் நமது நண்பர்கள் கொடுத்த பணத்தால் இந்த விழா நடைபெறுகிறது என்பது மகிழ்ச்சியான ஒன்று. 

நிறைய கோவில்களுக்கு நமது நண்பர்கள் சிறு சிறு உதவிகள் எல்லாம் செய்து இருக்கிறார்கள். நானும் பல கோவில்களுக்கு என்று பணஉதவி கொடுத்து இருக்கிறேன். எல்லாம் உங்களிடம் இருந்து பெறப்பட்ட பணம்.

செவ்வாய் பரிகாரத்திற்க்கு என்று அனுப்பிய ஜாதகங்களை எல்லாம் பார்த்து அவர் அவர்களுக்கு தனியாகவே இந்த பரிகாரத்தை செய்து இருக்கிறேன். பல முருகன் கோவில்களுக்கு நம்மால் முடிந்த உதவி மற்றும் என்னால் செய்யப்பட்ட பரிகாரம் உங்களுக்கு முருகனின் அருளைப்பெற்று செவ்வாய் உங்களின் ஜாதகத்தில் நல்ல பலனை வழங்கும்.

பொதுபரிகாரத்தில் பணம் இவ்வளவு என்று நிர்ணயம் செய்யாததால் பல நண்பர்கள் இதில் கலந்துக்கொள்ளமுடிந்தது. அதோடு அவர்களே அவர்களின் பகுதியில் உள்ள கோவில்களில் உதவி செய்ய வைத்தோம்.

இனிமேல் வரும் பொதுபரிகாரத்தில் அனைவரும் கலந்துக்கொள்ளவேண்டும் என்பது தான் எனது விருப்பம். கண்டிப்பாக நல்லது நடக்கும். உங்களால் முடிந்தளவு பணத்தை வைத்து இதனை செய்துக்கொள்ளமுடியும் என்பதால் அனைவரும் கலந்துக்கொள்ளுங்கள்.

இந்த பரிகாரத்தில் கலந்துக்கொள்ளாதவர்கள் அருகில் இருக்கும் முருகன் கோவில் சென்று முருகனை வணங்கி வாருங்கள்.

நாளை நமது அம்மன் பூஜை நடைபெறுகிறது. அம்மன் பூஜைக்கு என்று நடைபெறும் நாள் வரை நமது நண்பர்கள் பணம் அனுப்புவார்கள். அவர்களின் பெயரை பதிவில் போடவேண்டும் என்பதற்க்காக மறுமுறை அனைவர்களின் பெயரையும் பதிவில் அளிக்கிறேன்.

சென்னையை சேர்ந்த திரு கணேசன் அவர்கள்.
சென்னையை சேர்ந்த திரு இராஜ்கண்ணன் அவர்கள். 
நெதர்லாண்டை சேர்ந்த திரு முருகானந்தம் அவர்கள். 

காஞ்சிபுரத்தை சேர்ந்த திரு சிவன் அவர்கள் .
இராஜபாளையத்தை சேர்ந்த திரு அருண் அவர்கள். 
சென்னையை சேர்ந்த திரு சுகுமார் அவர்கள்.

பெரம்பலூரை சேர்ந்த திரு சத்தியசீத்தாராமன் அவர்கள். 
கோயம்புத்தூரை சேர்ந்த திரு குமார் அவர்கள்.
சென்னையை சேர்ந்த திரு ஹரிஹரன் அவர்கள். 

கரூரை சேர்ந்த திரு முத்து அவர்கள்
சென்னையை சேர்ந்த திரு அசோகன் அவர்கள்.
ஒடமாதுறையை சேர்ந்த திரு மெய்யழகன் அவர்கள்.
கோயம்புத்தூரை சேர்ந்த திரு வரதராஜன் அவர்கள்.

மற்றும் திரு கிருஷ்ணப்பசரவணன் அவர்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: