Followers

Friday, November 25, 2016

அள்ளி தரும் சுக்கிரதசா


ணக்கம்!
         சுக்கிரதசா ஒருவருக்கு நடந்தால் அவர் நல்ல வெள்ளைநிற துணிகளை உபயோகப்படுத்துங்கள். அணியும் துணிகள் மற்றும் பயன்படுத்தும் அனைத்தும் வெள்ளிநிறத்தில் இருந்தால் நன்றாக இருக்கும்.

சுக்கிரதசா நடக்கும்பொழுது வீட்டிற்க்கு அடித்து இருக்கும் பெயிண்ட் கூட வெள்ளி நிறத்தில் இருந்தால் நல்லது. பயன்படுத்தும் வாகனமும் வெள்ளைநிறத்தில் இருந்தால் மிகவும் சிறப்பு.

சுக்கிரதசா நடக்கும்பொழுது நாம் வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்தால் அதனால் திருஷ்டி வருகின்றது என்று நண்பரின் வீட்டிற்க்கு செல்லும்பொழுது சொல்லிருந்தார். நீங்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமையில் வீட்டில் திருஷ்டி கழித்துக்கொள்ளுங்கள். கல்லடி பட்டாலும் கண்ணடி படகூடாது என்பார்கள் அதனால் திருஷ்டி கழித்துக்கொண்டால் நல்லது.

ஒரு வேஷ்டி ஐநூறு ரூபாய் சாதாரணமாக இருந்தால் நீங்கள் வாங்குவது இரண்டாயிரம் ரூபாய் வேஷ்டியாக இருக்கவேண்டும். அதிகவிலை இருந்தால் கூட பரவாயில்லை அதனை வாங்கி பயன்படுத்துங்கள்.

பெண்கள் வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது அவ்வளவு நல்லதல்ல என்பது நமது மதத்தின் வழக்கம். ஒரளவு வெண்மை வரும்படி பார்த்துக்கொள்ளுங்கள். கொஞ்சம் பளிச்சு என்று இருக்கும்படி இருந்தால் நல்லது.

வெள்ளை ஆடை தேர்வு செய்யும்பொழுது கொஞ்சம் அதிக விலை கொடுத்து அந்த ஆடையை தேர்வு செய்வது நல்லது. குறைந்த விலையில் உள்ள வெள்ளை ஆடை கொஞ்சநாளில் அது மாறி வறுமையில் உள்ளவர் போல் செய்துவிடுகின்றது.

எல்லையற்ற செல்வவளத்தை பெறுவதற்க்கும் சுக்கிரதசா நிறைந்த பலனை உங்களுக்கும் உங்களின் குடும்பத்திற்க்கும் பெறுவதற்க்கும் நமது அம்மனை வழிபாடு செய்யுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: