Followers

Thursday, November 10, 2016

மாமியார் வீட்டில் மரியாதை எப்படி?


வணக்கம்!
          நேற்று சுகஸ்தானத்தைப்பற்றி ஒரு சில விசங்களை சொல்லிருந்தேன். அதனைப்பற்றி மேலும் கொஞ்சம் பார்க்கலாம். இன்றைய இளைய தலைமுறையினர் திருமணம் முடிந்தவுடன் அவர்களின் மாமனார்களின் வீடுகளுக்கு தஞ்சம் புகுந்துவிடுகின்றனர் என்பதை ஏற்கனவே பார்த்து இருக்கிறோம்.

மாமனார் வீடுகளுக்கு எப்பொழுதாவது சென்று வந்தால் மரியாதை இருக்கும். எப்பொழுதும் அங்கே கிடந்தால் மரியாதை என்ன கிடைக்கும் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை. 

ஒரு நல்ல பையன் மாமனார் வீட்டிற்க்கு ஒரு முறை செல்லும்பொழுது அங்கு அவர்க்கு இராஜமரியாதை கொடுத்தால் அந்த பையனுக்கு நான்காவது வீடு என்பது நன்றாக வேலை செய்கிறது என்று அர்த்தம்.

ஒரு நல்ல பையன் மாமனார் வீட்டிற்க்கு செல்லும்பொழுது அங்கு மரியாதை என்பது கிடைக்கவில்லை என்றால் அவர்க்க்கு நான்காவது வீடு நன்றாக இல்லை என்று அர்த்தம். ஒரு சிலருக்கு அடி கூட விழும் அவர்களுக்கு எல்லாம் படுமோசமாக நான்காவது வீடு இருக்கும் என்று அர்த்தம் கொள்ளவேண்டும்.

மிதுன ராசியினர்க்கு மாமனார் வீடு செட்டாவது என்று பொதுவாக சொல்லுவார்கள். நான் பார்த்தவரை மிதுனராசியினர் மாமியார் வீட்டில் வீடு கூட்டும் விளக்கமாறு அடி வாங்கியிருக்கிறார்கள்.

ஒருவருக்கு நான்காவது வீடு செவ்வாய்யாக வரும்பொழுதும் அல்லது நான்காவது வீட்டில் செவ்வாய் இருந்தால் அவர்க்கும் அவரின் மாமியார் வீட்டிற்க்கும் அடி தடி கூட நடந்துள்ளது.

ஒருவருக்கு நான்காவது வீட்டில் சுக்கிரன் இருந்தால் அவர்களுக்கு நல்ல மரியாதை கிடைக்கும்.கூடுதலாக ஒரு நல்ல விசயம் என்ன என்றால் அங்கு நிறைய மச்சினியும் இருப்பார்கள். மாப்பிள்ளைக்கு யோகம் தான் என்று சொல்லலாம்.

உங்களின் ஜாதகத்தில் நான்காவது வீடு எப்படி இருக்கின்றது என்பதை பாருங்கள். நான்காவது வீடு நன்றாக இருந்தால் நல்லது அப்படி இல்லை என்றால் அடி நிச்சயம்.

4 மணிக்கு எட்டில் சந்திரன் ஏழரைசனி

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: