Followers

Thursday, November 17, 2016

என்ன காரணம்?


ணக்கம்!
ஒரு நல்ல பரம்பரை குடும்பத்தில் இருந்து வந்த ஒருவர் தன்னுடைய பரம்பரையை விட்டுவிட்டு வேறு இடத்திற்க்கு சென்று திருமணம் செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அப்பொழுது என்ன ஆகும் அந்த பரம்பரை சங்கிலி தொடர் அறுபட ஆரம்பிக்கும். என்ன காரணம்?

இன்றைக்கு நாகரீகம் என்ற பெயரில் எது எதுவோ நடைபெறுகிறது அல்லவா அது நடைபெறுவதற்க்கு என்ன காரணம் அனைத்தும் பிற கலாசாரத்தின் மீது உள்ள ஒரு மோகம். என்ன காரணம்?

இன்றைக்கு ஒரு நல்ல குடும்பமாக உயர்ந்து சமுதாயத்தில் போராடி மேம்பட்டு வரும்பொழுது உங்களின் வாரிசுகள் ஒரு தரம்கெட்ட குடும்பத்தோடு உறவுக்கொண்டு அது தான் உலகம் என்று வாழ விரும்புகிறதா அதற்கு என்ன காரணம்?

உங்களுக்கு வாரிசு என்ற ஒன்று இல்லாமல் போவதற்க்கும் வந்த வாரிசும் உருபடவில்லை என்ற வருத்தத்திற்க்கும் அல்லது வாரிசு ஏதோ ஒரு குறையோடு இருப்பதற்க்கும் என்ன காரணம்?

ஆசையாக வளர்த்த பெண் யாரோ ஒருவனோடு ஓடிபோகிறதா அதனால் நீங்கள் தற்கொலை செய்ய நினைக்கிறீர்களா அதற்கு காரணம் ?

மேலே சொன்ன அனைத்திற்க்கும் காரணம் ராகு கேது என்பதை மட்டும் புரிந்துக்கொள்ளுங்கள். உங்களின் ஜாதகத்தை எடுத்து ராகு கேது எங்கு இருக்கின்றது என்பதை மட்டும் பாருங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: