Followers

Tuesday, December 13, 2016

செவ்வாய்


வணக்கம்!
         செவ்வாய் கிழமை அன்று விரதம் இருக்க அனைவரிடம் சொல்லுவது உண்டு. செவ்வாய்கிழமை விரதம் இருந்தால் உடலுக்கும் நல்லது மற்றும் பல நன்மைகள் நமக்கு கிடைக்கும். நம்ம ஆட்கள் இதனை எல்லாம் செய்வதே கிடையாது என்பது பல பேர்களிடம் கேட்டபொழுது தான் தெரிந்தது. மறுமுறையும் சொல்லுகிறேன் அனைவரும் செவ்வாய்கிழமை விரதத்தை மேற்க்கொள்ளுங்கள்.

ஒருவருக்கு செவ்வாய்கிரகம் ஏழில் இருந்தால் அவருக்கு அந்த தசா நடக்கும்பொழுது அதிகமாக அடிப்படுவது உண்டு. இந்த அடிப்படுவது கூட ஒரு இடத்திலேயே அடிபடுவது உண்டு. 

ஒரு இடத்திற்க்கு நீங்கள் சென்றீர்கள் என்றால் அந்த இடத்தில் நீங்கள் அடிப்பட்டால் அதே பகுதியில் மறுமுறையும் அடிப்படுவது உண்டு.

எனக்கு தெரிந்த ஒருவருக்கு செவ்வாய் தசா நடக்கும்பொழுது அவர் சைக்கிளில் சென்றப்பொழுது அவர் அடிப்பட்டார் அவர் அடிப்பட்ட இடம் பட்டவன் கோவில் இருக்கும் பகுதியில் அடிப்பட்டார். முதல் முறை அடிபடும்பொழுது நல்ல காயம் ஏற்பட்டது.

மறுமுறை பல வருடங்களுக்கு பிறகு அடிப்பட்டது. அப்பொழுது அவருக்கு செவ்வாய் தசா நடைபெறவில்லை ஆனால் அடிப்பட்டது அடிப்பட்ட இடமும் ஏற்கனவே அடிப்பட்ட இடத்தில் அடிப்பட்டது. 

அனுபவத்தில் பலருக்கு அப்படி நடந்திருப்பதால் நீங்களும் அந்த இடத்தில் செல்லும்பொழுது கவனமாக செல்லவேண்டும். தசா நடக்கவில்லை என்று அலட்சியமாக இருக்காமல் கவனத்தோடு செல்லவேண்டும்

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: