Followers

Tuesday, December 20, 2016

செவ்வாய்

ணக்கம்!
          ஒருவருக்கு செவ்வாய் தசா ஆரம்பித்தால் அந்த நபருக்கு வீடு சம்பந்தப்பட்ட விசயத்தி்ல் கொஞ்சம் எச்சரிக்கையோடு இருக்கவேண்டும். செவ்வாய் கிரகம் நல்ல நிலையில் இருந்தால் பிரச்சினை இல்லை. செவ்வாய் கிரகம் கொஞ்சம் கெட்டாலும் அவர் வீடு சம்பந்தப்பட்டத்தில் மாட்டிக்கொள்வார்.

செவ்வாய் கிரகம் நமக்கு தீங்கு செய்ய ஆரம்பித்தால் நாம் மாட்டிக்கொண்டு அதில் இருந்து தப்பிப்பது அவ்வளவு எளிதான காரியமாக இருக்காது. 

நீங்கள் ஒரு இடத்தில் இடம் வாங்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அந்த இடத்தை வாங்கியபிறகு தான் தெரியவருகிறது அதில் ஏதோ வில்லங்கம் இருக்கின்றது. வில்லங்கமாக இருக்கின்ற நிலத்தை வாங்கிவிட்டீர்கள் அதனை நீங்கள் சரி செய்வதற்க்குள் போதும் போதும் என்று ஆகிவிடும்.

செவ்வாய் கிரகம் ஜாதகத்தில் அமைந்த இடம் சரியாக இல்லை என்றால் நிலத்தோடு கிடந்து போராட வேண்டிவரும். ஒரு சிலருக்கு நிலமே அமையாமல் போய்விடுவதும் உண்டு. வாழ்நாளில் அவர்களின் பெயரில் ஒரு நிலம் கூட இல்லாமல் சென்றவர்களும் இருக்கின்றார்கள். 


ராகு கேது பரிகாரத்திற்க்கு கடைசி நேரத்தில் நிறைய நண்பர்கள் ஜாதகத்தை அனுப்பிவிட்டார்கள். ராகு கேது பரிகாரம் என்று சொல்லி ஒரு மாதகாலம் இருக்கும் ஆனால் நம்ம ஆட்கள் கடைசி நேரத்தில் ஜாதகத்தை அனுப்பினார்கள். பலர் அந்தநாளில் என்னோடு பேச போனில் தொடர்புக்கொண்டார்கள். அந்த நாளில் நான் இருந்த பிஸியால் யாருடனும் பேசமுடியவில்லை. இனி வரும் காலங்களில் பரிகாரம் என்று வந்தால் அறிவிப்பு வந்தவுடன் அனுப்பி வைத்துவிடுங்கள்

ராகு கேது பரிகாரம் இந்த வாரம் முழுவதும் பூஜை நடைபெறும். நீங்கள் அனுப்பிய ஜாதகத்திற்க்கு ஒரு நல்ல மாற்றம் வரும் என்பதை மட்டும் சொல்லலாம். அம்மன் அருளால் உங்களுக்கு நடைபெறும்.

நீங்கள் செய்த பிராத்தனையால் இன்று தஞ்சாவூர் பகுதியில் மழை பெய்கிறது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

1 comment:

nallur parames said...

Kovai ku mazhai anuppunga.