Followers

Tuesday, December 6, 2016

சந்திரன்


வணக்கம்!
          தமிழக முதல்வர் ஜெ ஜெயலலிதா அவர்கள் இறந்தர்க்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். நமது வாடிக்கையாளர்களில் அவர் சார்ந்த கட்சியில் இருப்பவர்கள் அதிகம் பேர் நல்ல பழக்கம் உண்டு. ஆன்மீகத்திற்க்காக நிறைய செய்பவர்கள் அவர்கள். 

அனைவரும் இறப்பு செய்தி கேட்டு ஆழ்ந்த வருத்தத்தில் இருக்கின்றார்கள். அவர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இதில் இருந்து மீண்டு வர அவர்கள் நம்பிக்கை வைத்த ஆன்மீகம் கைகொடுக்கும்.

ஜாதககதம்பத்தில் பதிவு வரும் என்று நிறைய பேர் வருவார்கள் அவர்களுக்கு பதிவை தரவேண்டும் என்று இந்த நேரத்தில் பதிவை தருகிறேன்.

சந்திரனைப்பற்றி ஜாதககதம்பத்தில் நிறைய எழுதியிருக்கிறேன். சந்திரனை வைத்து தான் நமது சோதிடமும் இருக்கின்றது என்று சொல்லியுள்ளேன். 

ஒரு சோதிடனுக்கு கிரகம் எப்படி சென்றுக்கொண்டு இருக்கின்றது அதனால் என்ன பலன் கிடைக்கும் என்பது நன்றாக தெரியும் ஆனால் அதனை அனைத்தையும் சொல்லாமல் சூழ்நிலை கருதி பல கருத்தை சூசகமாக தெரிவிப்பார்கள். 

சந்திரன் மகரராசிக்குள் வந்தாலே சிம்மத்திற்க்கு பிரச்சினை என்று தான் அர்த்தம். ஞாயிற்றுக்கிழமையில் இருந்தே சந்திரன் மகரராசிக்குள் இருக்கின்றது. சிம்மத்திற்க்கு பிரச்சினை என்பது உங்களுக்கு தெரிந்து இருக்கும். 

நடந்து முடிந்ததை பற்றி ஒன்றும் சொல்லவேண்டாம் ஆனால் அதிலிருந்து நமக்கு ஏதாவது ஒன்றை கற்றுக்கொள்ளலாம் அல்லவா. உங்களின் ஜாதகத்தில் சந்திரனின் நிலையை நன்றாக கவனியுங்கள் அதன்படி நடக்க கற்றுக்கொண்டால் போதும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: