Followers

Tuesday, December 27, 2016

செவ்வாய் தரும் கடன்


வணக்கம் !
          மாதம்தோறும் கார்டு நிறைய சம்பளம் வாங்கும் நபர்களுக்கும் கடன் இருக்கும். இந்த காலத்தில் இது அதிகம் என்று சொல்லியே தீரவேண்டும். நிறைய பேர்கள் கடனோடு வாழ்க்கையை நடத்துவார்கள். 

பொதுவாக ஆறுக்குடையவனின் தசாவில் கடன் ஏற்படும் என்பது சோதிடவிதி. அதோடு சனி சூரியன் மற்றும் செவ்வாயின் வீட்டில் சந்திரன் இருந்தால் அவர்களுக்கு கடன் ஏற்படுவது உண்டு என்பதும் சோதிடவிதி.

ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய்கிரகத்தின் பலன் குறைந்தால் அவர்களுக்கு கடன் ஏற்படும் என்று சொல்லுவார்கள். இதுவும் உண்மை தான். செவ்வாய் பலன் குறைவது அல்லது நீசம் அடைந்தால் அவர்களுக்கும் கடன் ஏற்படுவது உண்டு.

கடன் என்ற ஒன்று அனைவரையும் அச்சுறுத்தினால் அப்பொழுது செவ்வாய் கிரகம் சரியில்லாமல் கோச்சாரத்தில் சென்றுக்கொண்டு இருக்கின்றது அர்த்தம்.

கடனோடு நம்ம வாழ்க்கையை செலுத்திக்கொண்டிருக்கும் அனைவரும் செவ்வாய் கிரகத்தை நன்றாக வணங்கி அந்த கடனை போக்கிக்கொள்ளமுடியும். படிப்படியாக கடன் குறையும். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: