Followers

Friday, January 13, 2017

தலைவலிக்கு அருமருந்து


ணக்கம்!
          எனக்கு கடும் தலைவலி வரும். தலைவலி வந்த நபர்களுக்கு தான் அதன் வலி என்ன என்பது புரியும். தலைவலி வருவதற்க்கு பல காரணங்கள் எனக்கு இருந்தாலும் இதனை போக்க வழி என்ன என்பதை பல பேரிடம் கேட்டேன். அதற்கு சரியான ஒரு தீர்வு எனக்கு கிடைக்கவில்லை.

எனக்கு தீர்வுகிடைக்கவில்லை என்பதற்க்காக நான் ஒய்வு எடுத்துக்கொள்ளவில்லை மாறாக தலைவலிக்கு ஏதோ ஒரு நல்ல வைத்தியம் இருக்கின்றது அது நமக்கு தெரியவில்லை என்று இருந்தேன்.

எனது அம்மா மட்டும் ஒரு வைத்தியத்தை சொல்லிக்கொண்டே இருந்தார்கள் ஆனால் அதனை நான் பெரிதும் நம்பவில்லை அதனை செய்யவும் இல்லை. கடைசியில் எல்லாவற்றையும் செய்துவிட்டோம் இனி இதனை செய்துவிடலாம் என்று செய்தேன்.

அம்மா சொன்ன வைத்தியம் இது தான் வேப்ப எண்ணெயை (Neem Oil) காய வைத்து அதனை தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் எப்பேர்ப்பட்ட தலைவலியும் தீரும். 

ஒரு சிலருக்கு இந்த வேப்பெண்ணெய் உடலுக்கு சூடை ஏற்றிவிட்டு உடலுக்கு ஏற்றுக்கொள்ளாது. அதனை மட்டும் கொஞ்சம் கவனித்துவிட்டு தேய்த்தால் போதும். வேப்பெண்ணெய் சூடு அதிகமாக இருக்கும் சூடு உடலுக்கு ஏற்றுக்கொள்ளாத நபர்கள் தவிர்த்துவிடுங்கள்.

எனக்கு படிப்படியாக தலைவலி குறைந்துவிட்டது. உங்களுக்கு தலைவலி இருந்தால் இதனை பயன்படுத்தி வாருங்கள். வாரம் இரண்டு முறை என்று இரண்டு தடவை செய்து வந்தாலே போதும் குணமாகிவிடும். 

உங்களுக்கு தெரிந்த நண்பர்களுக்கு எல்லாம் இதனை சொல்லுங்கள். கண்டிப்பாக தலைவலி என்பது மிக மிக பெரிய கொடுமையான ஒன்று என்பது பட்டவர்களுக்கு தான் தெரியும். எனது அம்மா சொன்ன வைத்தியத்தை அலட்சியப்படுத்தியதால் பல வருடங்கள் கொடுமைப்பட்டு வந்தேன். இறைவன் அருளால் அது குறைந்துவிட்டது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: