Followers

Thursday, January 26, 2017

உயர்ந்த பண்பு


வணக்கம்!
          பல பெரியவர்களை பார்த்து இருக்கிறேன். வயது ஏறினாலும் ஒரு சிலர் இன்னமும்  சல்லியாக நடந்துக்கொள்வார்கள். பல பிரச்சினைகளை உருவாது இவர்கள் தான் இருக்கும். வயது ஏறினால் அமைதி இருக்கவேண்டும்.

ஒரு நிகழ்ச்சி நடைபெறுகிறது என்று வைத்துக்கொள்வோம். அது நல்லதாக இருந்தாலும் சரி கெட்டதாக இருந்தாலும் சரி அதில் நிறைய குளறுபடிகள் நடந்தால் கூட நாம் அமைதியாக இருந்துவிடவேண்டும் அது தான் நல்லது.

ஒரு உயர்ந்த பண்பாக நாம் என்ன நினைக்கவேண்டும் என்றால் இந்த நிகழ்வு நன்றாக நடக்கவேண்டும் என்ற ஒரு மனநிலையில் நீங்கள் இருந்தால் போதும். அது அவர்களை வாழ்த்தும். உங்களையும் இந்த உலகம் மதிக்கும்.

மேலே சொன்ன பண்பு உங்களிடம் இயற்கையாக வரவேண்டும் என்றால் அதற்கு உங்களின் ஜாதகத்தில் குரு கிரகம் நன்றாக இருக்கவேண்டும். உங்களின் ஜாதகத்தில் குரு கிரகம் சரியில்லாமல் இருந்தால் கூட இதனை நீங்களே கற்றுக்கொள்ளுங்கள்.

மிக உயர்ந்த பண்பு எல்லாம் நம்மிடம் வரவேண்டும் என்றால் அதற்கு நம்முடைய ஜாதகத்தில் குரு தசா நடக்கவேண்டும் அப்படி இல்லை என்றால் உங்களுக்கு ஒரு குரு இருந்து வழிகாட்டினால் இது எல்லாம் நடக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: