Followers

Monday, March 6, 2017

சந்திரன் செய்யும் மனகுழப்பம்


வணக்கம்!
         இன்று அம்மன் பூஜை மற்றும் அன்னதானம் நமது அம்மன் கோவிலில் நடைபெறுகிறது. இந்த பூஜையும் மற்றும் அன்னதானமும் எனது சொந்தசெலவில் செய்யப்படுகிறது. இரண்டு நாட்களாக அந்த வேலையில் இருந்த காரணத்தால் தான் பதிவை கூட கொடுக்கமுடியவில்லை. நாளை முதல் வழக்கமான வேலைகள் நடைபெறும். 

நான் வெளியிடங்களுக்கு செல்லும்பொழுது மற்றும் வீட்டில் இருக்கும்பொழுது நான் சோதிடத்தைப்பற்றி எல்லாம் பேசுவது கிடையாது. தஞ்சாவூர் டூ திருச்சி செல்லும்பொழுது சாஸ்திர பல்கலைகழகம் இருக்கின்றது. இதில் சோதிடபாடம் இருக்கின்றது என்று நினைக்கிறேன். பஸ்ஸில் செல்லும்பொழுது இதில் ஏறுபவர்கள் ஒரு சிலர் சோதிடத்தைப்பற்றி பேசிக்கொண்டே செல்லுவார்கள்.

பொதுஇடங்களில் இப்படி எல்லாம் பேசுவது கூடாது. உங்களுக்கு சொல்லுவது கூட நாம் எதனை படித்தாலும் சரி அதனைப்பற்றி தேவைப்படும்பொழுது மட்டுமே பேசவேண்டும். தேவையில்லாமல் பேசகூடாது. 

மனக்காரகன் சந்திரன் பாதிப்படைந்தால் மட்டுமே ஏதாவது ஒன்றை படித்துவிட்டு அதனைப்பற்றி பேசச்சொல்லும். உலகத்தில் உள்ள அனைத்து விசயத்தையும் தெரிந்துக்கொள்ள மனம் நினைக்கும். தெரிந்துக்கொள்ளுங்கள். அதனை தெரிந்துக்கொண்டு உங்களுக்கு தேவையானதை மட்டும் எடுத்துக்கொண்டு மீதியை விட்டுவிடவேண்டும். அவசியம் ஏற்பட்டால் மட்டுமே அதனைப்பற்றி பேசவேண்டும். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: