Followers

Monday, April 10, 2017

சந்திரன் பரிகாரம்


வணக்கம்!
          கடந்த வெள்ளிக்கிழமை இரவு கிளம்பி பழனி சென்றேன். சனிக்கிழமை அதிகாலையில் தரிசனம் முடிந்து மீண்டும் சொந்த ஊருக்கு வந்துவிட்டேன். நேற்று முதல் பரிகாரம் ஆரம்பித்து இன்று காலை அம்மன் ஹோமம் செய்தேன். சந்திரன் பரிகாரத்திற்க்கு ஒரு புகழ்பெற்ற கோவிலுக்கு சென்றுவந்தது நல்ல மனநிறைவையும் தந்தது.

சந்திரன் பரிகாரத்திற்க்கு அனுப்பிய ஜாதகருர்களுக்கு சந்திரன் பரிகாரம் செய்யப்பட்டது. சந்திரன் பரிகாரத்திற்க்கு அனுப்பிய வாட்ஸ்அப் எண்ணிற்க்கு படங்கள் அனுப்பி வைத்துள்ளேன். படம் வராதவர்கள் என்னை தொடர்புக்கொள்ளுங்கள் அனுப்பி வைக்கிறேன்.

சந்திரன் பரிகாரத்தில் கலந்துக்கொண்டவர்களுக்கு அம்மன் அருளாலும் உங்களின் ஜாதகத்தில் உள்ள தோஷம் நிவர்த்தி செய்யபட்டதால் நல்லது நடக்க ஆரம்பிக்கும்.

பரிகாரத்தில் கலந்துக்கொண்டு விட்டோம் ஒன்றும் இனி செய்யவேண்டியதில்லை என்று இருந்துவிடாமல் தொடர்ந்து பல முயற்சிகளை எடுங்கள். உங்களை தேடி நல்ல காலம் வரும். முயற்சி செய்பவர்களுக்கு உடனே கிடைத்துவிடும்.

ஒரு சில ஜாதகர்கள் ஜாதகத்தை அனுப்பிவிட்டு வழக்கம்போல் அப்படியே எதுவும் செய்யாமல் இருகின்றார்கள். புண்ணியம் செய்து பலனை பெறலாம். இலவசமாக அனுப்பிய ஜாதகர்கள் அருகில் உள்ள ஏதாவது ஒரு கோவிலுக்கு சென்று ஏதாவது ஒன்றை வாங்கிக்கொடுத்துவிடும்படி கேட்டுக்கொள்கிறேன். 

ஏதோ பரிகாரம் என்று செய்துவிடாமல் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக பரிகாரம் செய்தேன். சிறந்த முறையில் மனநிறைவோடு இந்த பரிகாரத்தை செய்தேன். பலன் உங்களுக்கு கண்டிப்பாக நடைபெறும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: