Followers

Saturday, April 15, 2017

மாந்தி பலன்


 வணக்கம்!
          மாந்தி இரண்டில் நின்றால் என்ன பலன் என்பதை பார்க்கலாம். மாந்தி இரண்டில் நின்றால் அதிகப்பட்சம் திருமணம் நடக்காது. அப்படியே நடந்தால் கூட திருமணவாழ்க்கை அந்தளவுக்கு வெற்றி பெறாது.

இரண்டாவது வீடு என்பது வாக்கு ஸ்தானம் என்பதால் அதிகம் பேசமாட்டார்கள் அப்படியே பேசினாலும் வம்பு சண்டை வந்துவிடுவதும் உண்டு. ஒரு சிலர் எந்த நேரமும் பேய் பிசாசு என்று சொல்லிக்கொண்டு இருப்பார்கள். வாயிலிருந்து வரும் வார்த்தை அப்படி இருக்கும்.

பணப்புழக்கத்திற்க்கு உரிய வீட்டில் மாந்தி நிற்பதால் பணம் அந்தளவுக்கு வராது. ஒரு சில காலக்கட்டங்களில் பணம் வரலாம். ஒரு சிலர் மாந்திக்கு என்று பூஜை செய்து பணப்புழக்கத்தை அதிகப்படுத்துவார்கள். அதுவும் அவர்களின் பூர்வபுண்ணியத்தை பொறுத்து விசயம்.

மாந்தி பூஜை என்பது கொஞ்சம் சிக்கலான ஒன்று. இதனை வைத்து ஒரு சிலர் பெரியளவில் வந்து இருக்கின்றார்கள். நிறைய கர்மம் இதன் வழியாக வரும். என்பதால் கொஞ்சம் பார்த்து நீங்கள் செய்துக்கொள்ளலாம்.

பொதுவாக இரண்டாவது வீட்டில் மாந்தி நிற்பது அந்தளவுக்கு நன்மையளிப்பது கிடையாது. குடும்பமும் நன்றாக இருக்காது. எதுவும் சரியில்லை. வாழ்க்கை வெறுத்து போகின்றது என்று நினைப்பவர்கள் கண்டிப்பாக இந்த பரிகார பூஜையை செய்துக்கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: