Followers

Sunday, April 16, 2017

சித்தர்கள்


வணக்கம்
          நமது நண்பர் ஒருவர் சித்தர்கள் பற்றிய தகவல்களை அனுப்பினார். ஒரு தொலைக்காட்சியில் ஒரு நிகழ்வாக அதனை நடத்திக்கொண்டு இருப்பதை காண்பித்து கேட்டார். அந்த சித்தரைப்பற்றி நான் ஏற்கனவே நண்பர் ஒருவருக்கு சொல்லிருந்த காரணத்தால் அவர் அதனை கண்டு எனக்கு தகவல் கொடுத்தார்.

தமிழ்நாட்டிலும் சரி பிற மாநிலத்திலும் சரி நிறைய சித்தர்கள் வழிபட்ட பல இடங்களை மற்றும் நிறைய தகவல்களை நமது ஜாதக கதம்ப நண்பர்களிடம் சொல்லிருக்கிறேன். அவர்களும் அதனை சென்று பார்த்து இருக்கின்றனர்.

நான் சொன்ன இடங்கள் எல்லாம் யாராது உள்ளுர்க்காரர்கள் ஆக்கிரமித்து அதனை எடுத்துக்கொண்டு வருமானம் பார்ப்பது நடக்கும். இவர்கள் தொலைக்காட்சியை கூப்பிட்டு இந்த சித்தர் அல்லது நிறைய சித்தர்கள் இங்கு வந்து செல்கின்றனர் என்ற கதையை விடுவது நிறைய இடத்தில் நடக்கிறது. சம்பந்தமே இல்லாத தகவல்களை வெளியிடுவது உண்டு. 

நம்ம ஆட்கள் என்ன செய்வார்கள் என்பதை நமது ஜாதககதம்பத்தில் உள்ள நண்பர்களிடம் சொல்லிருக்கிறேன். அது எல்லாம் தற்பொழுது நடந்து வருவதை அவர்களும் கண்டுக்கொண்டுள்ளனர்.

குறை சொல்லவதற்க்காக இதனை எழுதவில்லை. பல கோவில்கள் மற்றும் சித்தர்கள் கோவில்கள் எல்லாம் அழிவதற்க்கு நம்ம ஆட்கள் செய்யும் வில்லங்கம் தான் காரணமாக இருக்கும். அதற்கு மீடியாக்களும் துணைபுரிந்து அழித்துக்கொண்டு இருக்கின்றது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: