Followers

Thursday, April 20, 2017

மாந்தி பலன்


வணக்கம்!
          மாந்தி இரண்டில் நின்றால் என்ன பலன் என்பதை பார்த்து கடந்த பதிவில் பார்த்திருந்தோம். மாந்தி இரண்டில் நின்றால் அந்த குடும்பத்தில் உள்ளவர்கள் குறைவாக இருப்பார்கள். அப்படியே அதிக குடும்ப உறுப்பினர்கள் இருந்தாலும் மாந்தி குடும்ப உறுப்பினர்களை குறைக்கும் முயற்சியில் இறங்கவிடுவார். சம்பந்தமே இல்லாமல் மரணநிகழ்வு அதிகமாக இருக்கும்.

ஒரு சில குடும்பங்களை நான் பார்த்திருக்கிறேன். மாந்தீரிகம் சம்பந்தப்பட்ட விசயத்தில் அதிகமாக ஈடுபடுவார்கள். தொழிலாக செய்யமாட்டார்கள் மாந்தீரிகத்தை நாடி செல்வார்கள். சின்ன வேலையாக இருந்தாலும் மாந்தீரிகம் செய்பவர்களை நாடி செல்வார்கள். 

மாந்தீரிகம் உண்மையா பொய்யா என்பதைப்பற்றி நான் கவலைப்படமாட்டார்கள். மந்திரம் எல்லாம் இவர்களின் கண்களுக்கு தான் உண்மை என்பது போல இருக்கும். இவர்களை அப்படி ஈர்ப்பதே மாந்தியின் வேலை.

மந்திரவேலைக்கு சென்றே தன்னுடைய பையில் உள்ள பணத்தை எல்லாம் வீண் செய்வார்கள். ஒரு சில காலக்கட்டங்களில் தன்னுடைய குடும்பத்தை கூட இந்த வேலையால் இழக்கவும் நேரிடும்.

பல அனுபவ ஜாதகங்களை பார்த்து தான் இதனை நான் எழுதுகிறேன். அவர்களின் வாழ்க்கையை நன்றாக உற்றுகவனிக்கும்பொழுது பல விசயங்கள் மாந்தீரிகத்தை சார்ந்தே இருக்கின்றது. உங்களுக்கும் இரண்டில் மாந்தி நின்றால் கொஞ்சம் நிதானமாக செயல்பட்டு இதனை எல்லாம் தவிர்க்கமுடியும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: