Followers

Sunday, April 23, 2017

சூரியன் போல் செயல்படும் செவ்வாய்


வணக்கம்!
          ஒரு சில இடத்தில் நாம் முருகனை வணங்கினால் அது சூரியனின் வேலையையும் செய்துக்கொடுக்கிறது. நமக்கு நிறைய அரசாங்க வழியில் வேலை நடப்பதற்க்கு சூரியன் காரகம் வகிப்பார். சூரியனை சென்று வணங்கி வருவதை விட அருகில் இருக்கும் முருகன் கோவிலாக பார்த்து வணங்கினால் நமக்கு அரசாங்கவேலை நடைபெறுகிறது.

செவ்வாய் மற்றும் சூரியன் அக்னியாக இருப்பதால் இரண்டும் ஒரே பலனை தருகிறதா என்று தெரியவில்லை ஆனால் பலன் கொடுக்கிறது. நிறைய அரசாங்கவழியில் நடப்பதற்க்கு தொடர்ந்து செவ்வாய் கிரகத்தை பலன் பெற வைத்தால் அது நடக்கிறது.

ஒரு சில காலத்தில் எல்லாம் நான் முருகன் கோவில் பக்கம் அதிகம் போவதில்லை. அனைவருககும் அரசாங்கவழியில் ஒரு தடவை சென்று பார்த்தால் நடைபெறும் வேலை எனக்கு பல நாட்கள் நீடிக்கும். அதன் பிறகு முருகன் கோவில் சென்று வழிபடும் வழக்கம் உருவானது. தற்பொழுது அது நன்றாக வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது.

நாம் போனால் ஒரளவு காரியத்தை சாதித்துவிட்டு வந்துவிடுகிறோம். நல்லபடியாகவும் அதிகாரிகள் நம்மிடம் நடந்துக்கொள்கிறார்கள். சூரியனை நான் சரி செய்யவில்லை செவ்வாய் கிரகத்திற்க்கு உரிய முருகனை தான் வணங்கினேன்.

நீங்களும் அரசாங்கவழியில் வேலை நடக்க அருகில் இருக்கும் முருகன் அல்லது பிரசித்திபெற்ற முருகன் கோவில் சென்று வணங்கி வாருங்கள். நல்லது நடக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: