Followers

Tuesday, April 25, 2017

மாந்தி


ணக்கம்!
          மாந்தி என்றவுடன் நம்ம மக்களிடம் பயம் அதிகமாக இருக்கும். சனியின் புதல்வன் என்பதால் தீயபலனை தான் தருவார் என்று நினைப்பார்கள். எந்த ஒரு கிரகமும் அப்படிப்பட்ட ஒன்றல்ல. அனைத்தும் சரி சமமாகவே தரும்.

மாந்தியை கண்டு அச்சப்படதேவையில்லை அதுவும் நமக்கு நல்லதை தரும். மற்ற கிரகங்களுக்கும் மாந்திக்கும் வித்தியாசம் இருக்கின்றது. அனைத்து கிரகங்களுக்கும் தசாபலன் இருக்கின்றது. மாந்திக்கு தசாபலன் கிடையாது.

மாந்தி எப்பொழுது தன்னுடைய பலனை கொடுத்துக்கொண்டு தான் இருக்கும். அப்பொழுது கொஞ்சம் அதிகமாகவும் இருக்கலாம். குறைவாகவும் இருக்கலாம். ஒவ்வொரு நாளிலும் குளிகன் வரும் நேரத்தில் இவரின் வேலை இருக்கும். ஒவ்வொருநாளிலும் இவருக்கு நேரத்தை ஓதுக்கி வைத்திருக்கிறார்கள்.

மாந்திக்கு பார்வை உண்டு என்றும் ஒரு சிலர் சொல்லுவார்கள். மாந்தி 2 7 12 பார்வை உண்டு என்று சொல்லுவார்கள். அனுபவத்திலும் பார்த்து இருக்கிறேன். ஒரளவு வேலையை செய்கிறது.

மாந்தி உங்களுக்கு சரியில்லை என்றால் நீங்கள் ஒவ்வொரு நாளும் வரும் குளிகன் நேரத்தில் கொஞ்சம் அமைதியாக செயல்படவேண்டும். அவசரகாரியமாக இருந்தால் கூட அமைதியாக இருந்தால் நல்லது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: