Followers

Wednesday, April 26, 2017

வழிகாட்டிய சித்தர்கள்


ணக்கம்!
          சித்தர்கள் என்றாலே அவர்கள் சிவனை தான் கும்பிடுவார்கள் என்று பொதுவாக ஒரு கருத்தை நாம் வைத்திருப்போம். அதிகப்பட்சம் சிவனை தான் கும்பிட்டார்கள் என்று அதிகமாக பரப்புகிறார்கள்.  பெருமாளையும் அவர்கள் வணங்கியிருக்கிறார்கள்.

பல பெருமாள் கோவில்களை சித்தர்கள் தான் உருவாக்கியிருக்கிறார்கள். பெயர் வித்தியாசப்பட்டாலும் அவர்களும் சித்தர்கள் தான். நிறைய ஊர்களில் பெருமாள் கோவிலை சித்தர்கள் உருவாக்கியதை நான் குருவின் வழியாக கேள்விப்பட்டு இருக்கிறேன்.

சித்தர்களால் உருவாக்கப்பட்ட பெருமாள் கோவில்கள் எல்லாம் இருக்கின்றது. பிரசித்துபெற்ற பெருமாள் கோவில்கள் கூட சித்தர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். எப்படி சிவன் கோவில்களில் சக்தி இருக்கின்றதோ அதேப்போல் பெருமாள் கோவில்களிலும் சக்தி இருக்கின்றது.

நான் ஆதிகாலத்து பெருமாள் கோவிலில்களில் உள்ள விசயத்திற்க்கு செல்லவில்லை தற்பொழுது நமக்கு தெரிந்து குறைந்தது ஒரு நூற்றாண்டுகளில் கட்டப்பட்ட பெருமாள் கோவில்களைப்பற்றி சொல்லுகிறேன். நமக்கு நன்கு தெரிந்த கோவில்களை நன்கு ஆராய்ந்துவிட்டு இதனை சொல்லுகிறேன்.

ஆதிகாலத்து பெருமாள் கோவில்கள் கூட சித்தர்கள் கட்டியது தான் என்று வாய்வழி சொல்லுவதை கேள்விப்பட்டு இருக்கிறேன். சித்தர்கள் அவர் அவர்களுக்கு பிடித்த தெய்வத்திற்க்கு கோவிலை கட்டி அதனை மக்கள் வணங்குபடி செய்திருக்கிறார்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: