Followers

Tuesday, April 11, 2017

கிருஷ்ணர் சொன்ன வழி


வணக்கம்!
          ஒரு ஆன்மீகவாதியோடு பேசிக்கொண்டு இருக்கும்பொழுது ஒன்றைப்பற்றி சொல்லிக்கொண்டு இருந்தார். அதாவது நீங்கள் பரிகாரம் செய்கின்றீர்கள் ஆனால் அந்த பரிகாரம் வேலை செய்யவேண்டும் என்றால் சம்பந்தப்பட்டவர்களின் உழைப்பு அதிகமாக இருக்கவேண்டும் அப்பொழுது தான் உங்களின் பரிகாரம் வேலை செய்யும் என்றார்.

பகவத்கீதையில் கிருஷ்ணர் சொன்ன விசயம் தான் உண்மை. கடமையை செய்துவிடு பலனை எதிர்பார்க்காதே. உழைப்பை நீங்கள் போட்டுவிட்டால் கண்டிப்பாக பலன் கிடைக்கும். அது இன்றே கிடைப்பதற்க்கு பரிகாரம் கைகொடுக்கும்.

நீண்டநாள்கள் காத்திருக்காமல் உடனே பலனை கொடுப்பதற்க்கு பரிகாரம் நல்ல துணை புரியும். நான் தொழில் செய்பவர்களுக்கு கூட சொல்லுவது இது தான் உங்களின் வேலையை முடித்துவிட்டு என்னிடம் சொல்லுங்கள் உங்களை தேடி பலன் வந்துவிடும் என்று சொல்லுவேன்.

பல பேர்கள் இப்படி தான் செய்வார்கள். எங்களின் வேலை முடிந்துவிட்டது இனி உங்களின் வேலையை ஆரம்பிக்கலாம் என்று சொல்லுவார்கள் அதன் பிறகு நான் பூஜை செய்து கொடுப்பது வழக்கம். 

நமது தளத்தில் செய்யப்படுகின்ற பரிகாரபூஜையில் கலந்துக்கொள்ளும் நபர்களுக்கு சொல்லுவது நீங்கள் ஜாதகத்தை மட்டும் அனுப்பிவிட்டு இருந்துவிடாமல் உங்களின் உழைப்பை போட்டுவிடுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: