Followers

Thursday, April 27, 2017

மாந்தி பலன்


வணக்கம்!
          மாந்தி மூன்றில் நின்று நேராக ஒன்பதாவது வீட்டை பார்க்கும். மாந்தி மூன்றில் நின்றாலே அது பித்ருதோஷமாக தான் கருத்தில் கொள்ளவேண்டும். மாந்தி மூன்றில் அல்லது ஒன்பதில் நிற்க்கும் ஜாதகர்கள் பெரும்பாலும் பித்ருதோஷத்தால் அவதிப்பட்டவராக தான் இருப்பார்கள்.

பித்ருதோஷத்தை விட கொஞ்சம் அதிகமாகவே அவதிப்படுபவர்களாக இருப்பார்கள். ஆவிகள் அடித்தவன் போலவே இளமைகாலம் இருந்திருக்கும். ஊர் ஊராக பிச்சைக்காரன் போலவே திரிந்திருப்பார்கள்.

மூன்றில் நிற்க்கும்பொழுதே சுகஸ்தானம் அவுட் என்ற கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டியது தான். சுகஸ்தானம் கெட்டால் அப்புறம் எப்படி நிம்மதியாக இருப்பார்கள். அலைச்சல் வாழ்க்கை அல்லவா வாழவேண்டும்.

ஒருவருக்கு பித்ருதோஷமும் இருந்து அதில் மாந்தி அமர்ந்தால் அவ்வளவு தான். அவன் பாடு பெரும்பாடாகிவிடும். அவன் கிறுக்குபிடித்தவன் போலவே இருப்பான்.

எப்படி இருந்தாலும் ஒரு காலத்திற்க்கு பிறக அவனின் வாழ்க்கை நன்றாக மாறிவிடும். கொஞ்ச காலம் எடுக்கும். அது முப்பது வயதாக இருக்கலாம் அல்லது அதற்கு கூட இருக்கலாம். நல்ல வாழ்க்கை கிடைக்கும் என்று நிச்சயமாக சொல்லலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: