Followers

Thursday, April 6, 2017

குருவும் சந்திரனும்


வணக்கம்!
           சந்திரன் பரிகாரத்திற்க்கு ஜாதகத்தை அனுப்ப இன்று இறுதிநாள். இதுவரை ஜாதகத்தை அனுப்பாத நண்பர்கள் உடனே அனுப்பி வைக்கும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

குரு சந்திரன் இணைந்து ஒரு ஜாதகத்தில் இருந்தால் அந்த ஜாதகருக்கு நல்ல வாழ்க்கை கிடைக்கும். குரு மட்டும் இதனை வழங்குவதில்லை சந்திரனும் முதன்மையாக இருக்கும் காரணத்தால் குரு சந்திரயோகம் செயல்படும்.

பெரும்பாலும் சந்திரனோடு சேரும் குரு மிகச்சிறந்த வாழ்க்கை அந்த ஜாதகருக்கு வழங்குவார். பெரிய பணக்காரர்களின் வாரிசுகளுக்கு எல்லாம் இந்த யோகம் இருக்கின்றது. அதனால் அவர்கள் பெரும் பணக்காரர்களாக திகழ்கிறார்கள்.

நிறைய பணம் தேவைப்படுபவர்கள் இந்த காலத்தில் என்ன யோசிப்பார்கள். ஷேர் மார்க்கெட்டில் சம்பாதிக்கலாம் என்று அதில் முதலீடு செய்வார்கள். ஷேர் மார்க்கெட்டில் சம்பாதிக்கும் யோகம் கூட சந்திரன் குருவும் சேர்ந்து இருந்தால் தான் கிடைக்கும்.

குருவும் சந்திரனும் ஒரு ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால் அவர்களுக்கு எப்படியாவது பணம் வந்துக்கொண்டு தான் இருக்கின்றது. உங்களுக்கு பணம் என்பதே வரவில்லை என்றால் இந்த இரண்டு கிரகங்களும் எப்படி இருக்கின்றது என்பதை பார்த்தால் உங்களின் நிலையை புரிந்துக்கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: