Followers

Friday, April 21, 2017

திருவிழா


வணக்கம்!
          வருடம் தோறும் இந்தமாதம் நான் எழுதும் பதிவு தான் இது. தொடர்ச்சியாக இந்த நிகழ்வுகளை மறக்காமல் நீங்கள் செய்வதற்க்காக இதனை எழுதுகிறேன்.

சித்திரை மாதம் என்றாலே தமிழ்நாட்டில் உள்ள தென்மாவட்டங்களில் திருவிழாக்கள் நடைபெறும் மாதமாக இருக்கும். சித்திரையை தொடர்ந்து வருகின்ற மாதங்களில் அந்தந்த ஊர்களுக்கு தகுந்தமாதிரி திருவிழாக்களை நடத்துவார்கள்.

ஒரு சாதாரணமான நாளில் கோவில் சென்று வழிபடுவதை விட திருவிழா காலங்களில் கோவில் சென்று வழிபடுவது அதிக நன்மையை தரும். சிறப்பான அலங்காரத்தில் சாமி இருக்கும்.

நம்ம ஆட்கள் கொஞ்சம் சொகுசு பேர்வழிகளாக இருப்பார்கள். திருவிழாவில் கூட்டம் அதிகமாக இருக்கும் அதனை தவிர்த்துவிட்டு சாதாரண நாளில் வழிபடலாம் என்று நினைப்பார்கள். என்ன தான் கூட்டமாக இருந்தாலும் சரி திருவிழா காலங்களில் சென்றுவழிபடுவது அதிக நன்மையை தரும்.

திருவிழாவில் தேர் இழுப்பது அதிக புண்ணியத்தை தரக்கூடிய ஒரு செயல். தேர் இழுப்பது அனைவருக்கும் கொடுத்து வைத்துவிடாது. புண்ணியம் இருப்பவர்களுக்கு அது கிடைக்கும். புண்ணியம் புண்ணியத்தை சேர்க்கும். அதனால் புண்ணியத்தை பெறுவதற்க்கு திருதேர் வடம்பிடியுங்கள். மேலே சொன்ன கருத்தை உடனே செயல்படுத்துங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: