Followers

Friday, April 7, 2017

சுக்கிரன்


வணக்கம்!
          குரு கிரகம் சரியில்லாத ஆட்களுக்கு எல்லாம் வெள்ளிக்கிழமை ஒரு உகந்தநாளாகவே இருக்கும். இரண்டு குருவில் ஒரு குருவாது உங்களுக்கு உதவவேண்டும் அல்லவா. அந்த வகையில் குரு கிரகம் சரியில்லை என்பவர்க்கு வெள்ளிக்கிழமையை கெட்டியாக பிடித்துக்கொள்ளலாம்.

சுக்கிரன் உங்களுக்கு வாரி வழங்குவார். பல பேர்கள் சுக்கிரனின் சாரஅம்சத்தில் தான் பெரும் செல்வந்தர்களாக இருக்கின்றனர். குரு கிரகம் ஒரு மாதிரியான பணவளத்தை கொடுத்தால் சுக்கிரன் வேறு விதமான பணவளத்தை கொடுப்பார்.

சுக்கிரன் என்றவுடன் அசுரகுரு அதனால் கெட்டவழியில் தான் பணம் வரும் என்று கெட்டவழியை தேர்ந்தெடுக்கவேண்டியதில்லை. சுக்கிரன் பல நல்ல வழிகளையும் கொடுத்து செல்வவளத்தை கொடுக்கிறார்.

சுக்கிரன் நல்ல பலத்தை கொடுக்கவேண்டும் என்றால் என்ன செய்யலாம் என்றால் வெள்ளிக்கிழமை கண்டிப்பாக ஒரு அம்மன் கோவில் சென்றுவருவது நல்ல பலனை கொடுக்கும்.

எந்த விசயத்தையும் தொடர்ச்சியாக செய்யும்பொழுது தான் அந்த விசயத்தின் உண்மையான பலனை நாம் அனுபவிக்கலாம் என்பதை புரிந்துக்கொண்டு தொடர்ச்சியாக அம்மன் வழிபாட்டை மேற்க்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: