Followers

Wednesday, May 10, 2017

மாந்தி பலன்


வணக்கம்!
          நேற்று தரவேண்டிய பதிவு வேலை காரணமாக பதிவை தரமுடியவில்லை. மாந்திக்கு பரிகார அறிவிப்பு அறிவித்து இருக்கிறோம். உங்களின் ஜாதகத்தில் மாந்தி எந்த இடத்தில் இருந்துக்கொண்டு இருக்கின்றது என்பதை பார்த்து அதற்க்கு பரிகாரம் செய்துக்கொள்ளலாம். 

மாந்தி ஆறில் நின்றால் நன்மையான பலனை அளிக்கும் என்பது ஒரு பொதுவான கருத்து. மாந்தி ஆறில் நின்றால் அவர்களின் தந்தை நல்ல பணக்காரர்களாக இருந்து அந்த சொத்தை அனுபவிக்கவேண்டிய ஒரு வாய்ப்பு இருக்கும். 

ஒரு சிலருக்கு தந்தை சரியில்லாமல் போனால் கூட அவர்களே கஷ்டப்பட்டு ஒரு நல்ல நிலைக்கு வந்துவிடுவார்கள். பெரும்பாலும் இவர்கள் கொஞ்சம் அதிரடியாக இறங்கி செயல்பட்டு முன்னேற்றம் காண்பார்கள்.

பெரும்பாலும் அரசியல் சார்ந்த தொழிலை செய்பவர்களுக்கு எல்லாம் மாந்தி ஆறில் நிற்க்கும். நிறைய அரசியல் சார்ந்தவர்களின் ஜாதகத்தில் இப்படிப்பட்ட அமைப்பு இருப்பதை நான் பார்த்து இருக்கிறேன். 

நேர்மையான வழியை எல்லாம் கடைபிடிப்பது கிடையாது. அரசியல் சார்ந்த தொழிலிலேயே கொஞ்சம் வில்லங்கம் செய்து சம்பாதித்துவிடுகிறார்கள். வில்லங்கம் செய்வதற்க்கும் ஒரு கொடுப்பினை இருக்கவேண்டும் அல்லவா. இவர்களுக்கு கொடுப்பினையை ஆறி்ல் நிற்க்கும் மாந்தி செய்கிறது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: