Followers

Monday, May 15, 2017

பீடை


வணக்கம்!
          ஒரு மனிதன் கையில் பணம் இல்லை என்ற போதும். கடுமையான வறுமை இருக்கும்பொழுதும் அவனிடம் பீடை மட்டும் இருந்துவிடகூடாது. பீடை இருந்தால் எப்படிப்பட்ட வேலை செய்தாலும் முன்னேற்றம் என்பது இல்லாமல் போய்விடும்.

எங்களை போல உள்ளவர்களுக்கு பீடை என்பது வரும் நிறைய பரிகாரங்கள் அடுத்தவனின் கர்மா எல்லாம் வரும் ஆனால் நாங்கள் சுத்தமாக இருக்கிறோம். அவர் அவர்களின் குடும்பங்களில் இருப்பவர்களுக்கு ஒரு சிலருக்கு கடுமையான பீடையோடு இருக்கின்றனர்.

தன்னை ஒழுங்காக பராமரிக்காதவர்களுக்கு இப்படிப்பட்ட பீடை இருக்கும். ஏனோ என்று இருந்துக்கொண்டு ஊரில் இல்லாத வேலைகளிலும் தலையை காட்டிக்கொண்டு மனதை குப்பை போன்று வைத்து இருந்தால் பீடை வந்துவிடும்.

ஒரு சிலர் எந்த நேரத்திலும் தவறாகவே பேசிக்கொண்டே இருப்பவர்களுக்கும் பீடை வந்துவிடும். வாயை மூடிக்கொண்டு இருந்தால் என்ன ? வாய் இருப்பதே பேசதான் என்பது போல் பேசிக்கொண்டே இருப்பார்கள். பீடை இல்லாமல் வாழ்ந்தாலே அனைத்திலும் வெற்றியை பெற்றுவிடலாம்.

ஒரு சிலர் எந்த நேரத்திலும் எதிரமறையாகவே பேசிக்கொண்டே இருப்பார்கள். சாகபோகிறான் என்பது போல் பேசுவார்கள். உலகத்தில் பிறந்த மனிதன் அனைவரும் சாகதான் போகிறான் இருந்தாலும் அதனை சொல்லிக்கொண்டே இருக்கவேண்டியதில்லை. உங்களால் முடிந்தளவுக்கு பீடை பிடிக்காமல் இருந்தாலே போதும் எப்படியும் ஒரு நல்ல வாழ்க்கையை இறைவன் கொடுத்துவிடுவான்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: