Followers

Thursday, May 18, 2017

குருவா ராகுவா


வணக்கம்!
          ஒருவர் தன்னுடைய வாழ்வை எப்படி தீர்மானிக்கவேண்டும் என்றால் ஜாதகப்படி ஒன்று குருவின் வழியை தேர்ந்தெடுக்கவேண்டும் அல்லது ராகுவின் வழியை தேர்ந்தெடுக்கவேண்டும்.

குரு கிரகம் சொல்லும் நேர்மையான வழியை தேர்ந்தெடுத்து அதற்கு தகுந்தார்போல் வாழ்க்கையை செலுத்தவேண்டும். வழிபாடு எல்லாம் குரு காரத்துவம் காட்டக்கூடிய வேலையை செய்தால் அதன் வழியாக உங்களுக்கு அனைத்தையும் பெற்றுக்கொள்ளலாம்.

குருவின் கீழ் நீங்கள் இருக்கும்பொழுது உங்களுக்கு எல்லா வழியிலும் செல்வவளம் வரும். ஒரு குருவை நீங்கள் பின்பற்றினாலே உங்களுக்கு பணப்பிரச்சினை இருக்காது. செல்வவளத்திற்க்கு குறைவு இருக்காது.

ராகுவின் வழியை பின்பற்றினாலும் பணம் வரும் ஆனால் அது கொஞ்சம் தவறான வழியில் சென்று அதன் வழியாக பணத்தை சம்பாதிக்கும் ஆளாக இருக்கவேண்டும்.

ராகுவின் காரத்துவம் காட்டக்கூடிய வழிபாடு அதனை சார்ந்த தொழிலை நீங்கள் பின்பற்றினால் உங்களுக்கு நடக்கும். இதற்கும் குரு எல்லாம் இருக்கின்றனர். அவர்களை நீங்கள் தேடினால் அதற்கு வழி செய்துக்கொடுப்பார்கள். 

எதனை நீங்கள் எடுக்கின்றீர்கள் என்பதை பொறுத்து உங்களின் வாழ்க்கை இருக்கின்றது. குருவா ராகுவா என்பதனை தீர்மானித்துவிட்டு அதன் பிறகு அதற்குள்ள வேலையை நீங்கள் செய்தால் கண்டிப்பாக உங்களுக்கு நல்லது நடக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: