Followers

Tuesday, May 30, 2017

பரிகார அனுபவம்


வணக்கம்!
          இன்று காலையில் ஒரு சில பேருக்கு பரிகாரம் செய்யலாம் என்று எடுத்து செய்தேன். கட்டணத்தில் அனுப்பியவர்களுக்கும் செய்திருக்கிறேன். இலவசமாக அனுப்பியவர்களின் ஜாதகத்தில் ஒரு சிலர் தன்னுடைய தானத்தை செய்யாமல் இருப்பது தெரியவருகிறது.

தானம் என்பது கண்டிப்பாக செய்யபடவேண்டிய ஒன்று என்று பரிகாரம் ஆரம்பித்த நேரத்தில் இருந்து சொல்லிக்கொண்டு வருகிறேன். பலர் அதனை செய்யவில்லை. பரிகாரம் வேலை செய்யவேண்டும் என்றால் கண்டிப்பாக இதனை செய்யுங்கள்.

ஒரு சிலர் கல்வி தானத்தை அருமையாக செய்திருக்கிறார்கள். நிறைய பேர்கள் பயன்படும் விதத்தில் இதனை செய்திருக்கிறார்கள். எனக்கு அதனைப்பற்றி தகவல்களை ஏற்கனவே அனுப்பியிருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் நன்றி.

தானம் செய்வதற்க்கும் கொஞ்ச அவகாசம் தருகிறேன்.அதாவது இலவசமாக ஜாதகத்தை அனுப்பியவர்கள் மேலும் இரண்டு நாட்கள் கழித்து தான் உங்களுக்கு பரிகாரம் செய்யபோகிறேன். அதனால் நீங்கள் செய்யவேண்டிய தானத்தை செய்துவிடுங்கள்.

உங்களுக்கு முடிந்தவாறு உங்களின் கையில் கிடைக்கும் பணத்தை வைத்து தானம் செய்யுங்கள். கண்டிப்பாக உங்களுக்கு பரிகாரம் நன்றாக வேலை செய்யும். நல்ல வாழ்க்கையை நீங்கள் வாழலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: