Followers

Friday, May 12, 2017

மாந்தி பலன்


வணக்கம்!
          ஒரு மனிதனுக்கு திருமணத்திற்க்கு முன்பு வாழும் வாழ்வு மிகவும் அற்புதமான ஒரு வாழ்வு. அவன் சொல்படி அனைத்தும் நடக்கும். உட்கார்ந்திருந்த இடத்தில் இருந்து அனைத்தையும் செய்யமுடியும். அனைத்தையும் செய்வது யார். அவனின் பெற்றோர்கள்.

திருமணத்திற்க்கு முன்பு ஒரு மனிதனின் அனைத்தை தேவைகளையும் அதிகப்பட்சம் அவனின் பெற்றோர்களே செய்துவிடுவார்கள். என்ன தான் லட்சக்கணக்கில் பையன் சம்பாதித்தாலும் அவனின் பெற்றோர் அவனுக்கு என்று அவர்களே உழைத்து கொண்டு வந்து கொடுப்பார்கள். கொடுப்பதை என்ன செய்தாய் என்று கூட கேட்கமாட்டார்கள்.

திருமணத்திற்க்கு பிறகு ஒருவனின் வாழ்க்கையே அப்படி போய்விடும். மனைவி சமைக்க தெரியாமல் சமைத்து போட்டாலும் அது ருசியாக இருக்கிறது என்று தான் அவன் சொல்லவேண்டும். திருமணத்திற்க்கு பிறகு ஒரு ஆணின் அனைத்து சந்தோஷமும் அவனை விட்டு போய்விடும்.

முக்கால்வாசி பேருக்கு திருமணத்திற்க்கு பிறகு வாழும் வாழ்க்கை ஒரு அற்பணிப்பான வாழ்க்கையாகவே இருக்கும். அனைத்தையும் தன் குடும்பத்திற்க்காகவே வாழும் வாழ்க்கையாக இருக்கும்.

எதற்க்கு திருமணத்தைப்பற்றி சொல்லுகின்றீர்கள் என்று நினைக்கலாம். மாந்தி ஏழில் நின்றால் திருமணத்திற்க்கு முன்பு சொர்க்கம் திருமணத்திற்க்கு பின்பு நரகமாகிவிடும். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: