Followers

Wednesday, May 10, 2017

கர்மா


வணக்கம்!
          அடுத்தவர்களை நாம் காப்பாற்றினால் அது மனிதாபிமானம். ஆன்மீகத்தில் உள்ளவர்களுக்கு குறிப்பாக ஞானிகளுக்கு அது கர்மாவாக எடுத்துக்கொள்வார்கள். அடுத்தவர்கள் அவர் அவர்களின் கர்மாப்படி நல்லது கெட்டது வரும். இதனை நீங்கள் எதுவும் செய்யகூடாது என்பார்கள்.

கர்மா என்றாலும் அதனை மிகச்சரியாக நாம் செய்தால் அதனை புண்ணியமாக எடுத்துக்கொண்டு விடலாம். நம்மை பொறுத்தவரை நிறைய பரிகாரத்தை செய்துக்கொடுத்துக்கொண்டு இருக்கிறோம். இலவச சேவை நிறைய வரும்பொழுது கர்மாவாக எனக்கு பிடிக்கும்.

கர்மா எனக்கு வரக்கூடாது என்பதற்காகவும் உங்களுக்கு புண்ணியம் சேர்க்கவும் தான் இலவசமாக பரிகாரத்திற்க்கு அனுப்பும் ஜாதகர்களுக்கு உங்களால் முடிந்த உதவியை பிறர்க்கு அல்லது கோவிலுக்கு செய்துவிடுங்கள் என்று சொல்லுகிறேன்.

ஒவ்வொருவருக்கும் நான் நிறைய செய்துக்கொடுக்கும்பொழுது அவர்கள் அனுப்பும் பணத்தை கொண்டு நிறைய நல்ல காரியங்கள் செய்யப்டுகின்றன. அதனை வெளியில் காட்டுவதில்லை ஆனால் செய்துக்கொண்டு தான் இருக்கிறேன். நான் எதுவும் செய்யவில்லை என்றால் நான் உங்களுக்கு பதிவை எழுதிக்கொண்டு இருக்கமுடியாது. இதனை விட்டு வெளியில் இழுத்துக்கொண்டு என்னை ஒன்றும் செய்யவிடாமல் செய்துவிடும்.

கர்மா பிடிக்காமல் வாழ்வதே சிறந்த ஆன்மீகவாழ்வு. நிறைய புண்ணியத்தை செய்யும் செயலை செய்துக்கொண்டே இருங்கள். ஒரு அற்புதமான வாழ்வு உங்களுக்கு கிடைக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: