Followers

Wednesday, August 30, 2017

மனோசக்தி


ணக்கம்!
          ஒரு பதிவில் இந்தியா சீனா இடையே ஏற்பட்ட பிரச்சினையைப்பற்றியும் அதனை தீர்க்க மனோசக்தி வழியாக தீர்வு காணலாம் என்பதைப்பற்றியும் சொல்லிருந்தேன். தற்பொழுது இரண்டு நாடுகளுக்கம் சுமூகமான தீர்வு ஏற்பட்டு இருக்கின்றது. 

இரண்டு நாடுகளுக்கும் சண்டை ஏற்படும்பொழுது கூட இருநாட்டில் உள்ள வீரர்கள் மல்லுக்கட்டு கட்டிக்கொண்டு தான் இருந்தனர். கையில் உள்ள துப்பாக்கியை எல்லாம் பயன்படுத்தவில்லை. இது ஒரு நல்ல பண்பாடாக இருந்தது.

நான் எழுதியது ஒரு பழைய தகவலை வைத்து இப்படி செய்தால் இது நன்றாக இருக்கும் என்று சொல்லிருந்தேன். அது எப்படி நடந்ததோ தெரியவில்லை ஆனால் நாம் சொல்லியபடி நாம் எழுதியது போல சாதகமாக இருந்தது.

ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஆன்மீகவாதிகள் தன்னுடைய ஆன்மசக்தியை பயன்படுத்தினால் அது நல்லதாக அமையும் என்பதில் மட்டும் எனக்கு ஒரு கருத்து இருக்கின்றது. அந்த கருத்தை உங்களோடு பகிர்ந்துக்கொண்டேன். தற்பொழுது நடந்ததை கூட நான் சொல்லி மார்தட்டிக்கொள்ளவேண்டும் என்பதற்க்காக சொல்லவில்லை. ஆன்மீகத்தில் இது சாத்தியப்படிக்கூடிய ஒன்று என்று சொல்லுவதற்க்காக சொல்லுகிறேன்.

கண்டிப்பாக இந்த மாதிரியான ஆன்மீகசெயல் செய்வதற்க்கு ஒரு பெரியளவில் ஆன்மீகம் தெரிந்து இருக்கவேண்டும் என்பதில்லை. குருவின் ஆசி முழுமையாக இருக்கவேண்டும் நாம் அவர்க்கு அடிபணிந்து இருந்தால் போதும். இது கிடைத்துவிடும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: