Followers

Friday, August 18, 2017

கண்திருஷ்டி


ணக்கம்!
          நம்முடைய மனிதர்கள் இருக்கின்றீர்களே இவர்கள் இந்த பூமியிலேயே மிக மிக மோசமான விலங்குகள். எப்படி என்றால் விலங்குகள் பசி எடுத்தால் தான் அடுத்த மிருகத்தை கொல்லும் மனிதர்கள் எதுவும் இல்லாமலே அடுத்தவனை கொல்லுவார்கள்.

உங்களுக்கு சோதிடத்தில் கிரகங்கள் நல்ல நிலையில் இருந்தாலும் மனிதர்களின் பார்வைபட்டால் நீங்கள் வீணா போய்விடுவீர்கள். கண் திருஷ்டி என்பதை தான் சொல்லுகிறேன். இன்றைய காலத்தில் நகர்புறத்திலும் இது பெரியளவில் இருக்கின்றது. 

கிரகங்கள் கூட அது நகர்ந்து அது நாள் பார்த்து தான் தாக்க ஆரம்பிக்கும் மனிதர்கள் இது எல்லாம் பார்க்கமாட்டார்கள் நீ நன்றாக இருந்தால் பார்த்தவுடனே உடனே தங்களின் தீய எண்ணத்தால் தாக்க ஆரம்பித்துவிடுவார்கள்.

நகர்புறத்தில் உள்ளவர்கள் உங்களின் சொந்தம் இல்லாமல் இருந்தாலும் உங்களின் நட்பு வட்டமும் உங்களின் வளர்ச்சியில் பெரிதும் பாதிப்படைய செய்கின்றனர. உங்களின் நட்பு வட்டத்தில் இருந்து கூட உங்களுக்கு கண்திருஷ்டி ஏற்படுகின்றது.

எப்பேர்பட்ட ஆளையும் கண்திருஷ்டி ஆளை சாய்த்துவிடும். இது உறவினர்களிடம் மட்டும் இல்லாமல் உங்களின் வீட்டிற்க்கு பக்கத்தில் வசிப்பவர்களிடமும் இருந்தும் இது வருகின்றது. அதனால் கண்திருஷ்டி போக்க என்ன வழி என்பதை தெரிந்துக்கொண்டு அதனை போக்கிக்கொள்ளுங்கள்.

உங்களின் வீட்டில் அடிக்கடி கண்திருஷ்டி போட சொல்லுங்கள். உங்கள் வழியாக உங்களின் வீட்டிற்க்கு வருமானம் வருகின்றது என்றால் உங்களுக்கு அடிக்கடி கண்திருஷ்டி போட வேண்டும். உங்களுக்கு கண்திருஷ்டி வருகின்றது என்றால் உங்களின் கால் அடிக்கடி மோதிக்கொள்வீர்கள். அதாவது கால் இட்டுக்கொண்டது என்று சொல்லுவார்கள் அல்லவா. அது உங்களுக்கு அடிக்கடி நடக்கும்.

தற்பொழுது எல்லாம் முன்கூட்டியே சொல்லிக்கொண்டு இது நடப்பதில்லை உடனே நமக்கு அடிவந்துவிடுகின்றது. கண்திருஷ்டி பட்டவுடன் நமக்கு அடி வந்துவிடும் நாம் மாட்டிக்கொள்ளவேண்டியதுதான். ஆன்மீக பூஜைகளில் எல்லாம் கண்திருஷ்டி போக்க தான் வழி செய்வார்கள். அடிக்கடி நீங்கள் கண்திருஷ்டி எடுத்துக்கொள்ளுங்கள். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: