Followers

Thursday, August 17, 2017

மனிதனிடம் உள்ள மனோசக்தி


ணக்கம்!
          இந்தியாவிற்க்கு போர் ஆபத்து வரும்பொழுது எல்லாம்  நமது ஆன்மீகவாதிகளால் அது தடுத்து நிறுத்தப்பட்டது என்று சொன்னால் நீங்கள் சிரிப்பீர்கள். உண்மையில் சீனாவுடன் ஏற்பட்ட சண்டையில் ஒரு ஆன்மீகவாதிதான் தன்னுடைய மனோசக்தியால் தீர்த்தார் என்று ஒரு தகவல் இருக்கின்றது.

தற்பொழுது எல்லையில் சீனா அதிக பிரச்சினையை கொடுத்துவருகின்றது என்பது அனைவருக்கும் தெரியும். கண்டிப்பாக இதற்கு எல்லாம் யாரோ ஒருவர் காரணமாக இருந்து இதனை வழிநடத்த வேண்டும். அதாவது சீனாவில் உள்ளவர் இதனை செய்யலாம்.

இதனை நன்கு மனோசக்தி பயிற்சி பெற்ற ஆன்மீகவாதி அவரின் மனதில் உருவாகும் எண்ணத்தை மாற்றலாம். கண்டிப்பாக அந்த ஆன்மீகவாதி வெளியில் தெரியாதவர்களாக இருப்பார். எப்படி இதனை சொல்லுகிறேன் என்றால் ஆன்மீகத்தில் இது சாத்தியப்படக்கூடிய ஒன்று என்பதால் இதனை சொல்லுகிறேன்.

இதனை உங்களிடம் சொல்லுவதற்க்காக காரணம் ஆன்மீகத்தில் உள்ள திறன் அப்படிப்பட்ட ஒன்று. இதனை கொஞ்சம் நான் அறிந்ததால் சொல்லுகிறேன். கண்டிப்பாக நான் செய்கிறேன் என்று நினைக்கவேண்டாம் எனக்கு எல்லாம் அப்படிப்பட்ட சக்தி கிடையாது. உங்களிடம் சொல்லுவதற்க்கு காரணம் நீங்களும் இப்படிப்பட்ட சக்தியை உருவாக்கமுடியும்.

நிறைய ஆன்ம சாதகர்கள் நம்ம நாட்டில் இருக்கின்றனர். இவர்கள் இதனை எல்லாம் கண்டுக்கொள்வதில்லை. இதனை எல்லாம் கண்டுக்கொண்டார்கள் என்றால் கண்டிப்பாக பெரியவில் மாற்றம் வரும். மனிதனிடம் உள்ள சக்தி மிகப்பெரிய சக்தி இதனை அறிந்துக்கொண்டால் போதும்.

சீனாவில் உள்ளவர்கள் இதனை தடுக்கவும் செய்வார்கள். அதனையும் மீறி இதனை செய்வதற்க்கு இந்தியாவில் உள்ளவர்களால் முடியும். ஏன் என்றால் இந்தியாவில் இருந்து தான் ஆன்மீகம் வெளியில் சென்றது. ஆன்மீகத்தில் இந்தியனை வெல்லுவதற்க்கு ஆட்கள் கிடையாது என்று சொல்லலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு