Followers

Thursday, August 31, 2017

ஆறு தரும் ஏமாற்றம்


ணக்கம்!
          ஆறாவது வீடு ஒரு சில இடத்தில் நம்மை அதிகம் கவிழ்த்துவிடும். வாழ்க்கையில் எப்படியும் ஒரு இடத்தில் நமக்கு வேலை செய்துவிடுவது உண்டு. அதாவது நாம் எங்காே யாரிடம் ஏதாவது ஒரு வகையில் ஏமாந்துவிடுவது உண்டு.

ஏதோ ஒரு விதத்தில் நம்மை ஏமாற்றுபவர்களிடம் சிக்கி ஏமாந்துவிடுவோம்.  ஏதோ ஒன்று ஏமாந்துவிடுவது உண்டு தான். இதில் பங்குவர்த்தம் போன்ற பணவிளையாட்டில் சிக்கி பணத்தை விடுபவர்களும் வருவார்கள்.

ஒரு விதத்தில் நாம் ஏமாறுவது கூட நல்லது என்று தான் தோன்றுகிறது. நம்முடைய கெடுதல் சரிசெய்யப்படுகின்றது என்று சொல்லலாம். நமக்கு வரும் கெடுதல் ஏமாற்றுவிதத்தில் வெளியில் சென்றுவிடும் என்று நினைக்கிறேன்.

பெரிய ஒரு கண்டம் வருகின்றது என்று வைத்துக்கொள்வோம். நமது உயிருக்கு ஆபத்தாக வரும் கெடுதல் ஒரு விதத்தில் பணத்தால் அல்லது ஏதோ ஒரு விதத்தால் சரிசெய்யபட்டுவிடும். உயிர்க்கு வந்த ஆபத்து விலகிவிடும்.

பல நண்பர்களுக்கு இதில் நல்ல அனுபவம் இருக்கும். அனுபவம் இருந்தால் நல்லது தான். அதற்கு காரணம்  இந்த ஒரு விதத்தில் ஆறாவது வீடு வேறு வழியாக வேலை செய்யாது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: