Followers

Wednesday, August 16, 2017

கடன்


வணக்கம்!
          நமக்கு ஏற்படும் கடன் ஆறாவது வீட்டில் இருந்து வருகின்றது என்பது தெரியும். அதேப்போல் நமக்கு கடன் கொடுப்பவர்களும் ஆறாவது வீட்டு அதிபதியை பொறுத்து தான் கடன் கொடுப்பவரையும் கணிக்கமுடியும்.

பொதுவாகவே நமக்கு ஒருவர் கடன் கொடுக்கிறார் என்றால் ஒன்று அன்பால் கொடுக்கவேண்டும் அப்படி இல்லை என்றால் நம்மை வைத்து அவர் ஏதாே செய்ய போகிறார் என்று அர்த்தம் கொள்ளவேண்டும். 

நமக்கு கடன் கொடுக்கிறார்கள் என்றால் ஒன்று நட்பு வட்டாரம் செய்யும். அடுத்ததாக உறவினர்கள் செய்வார்கள். கொஞ்ச காலத்திற்க்கு முன்பு உறவினர்கள் தான் கடன் கொடுப்பார்கள். தற்பொழுது உறவினர்கள் செய்வதில்லை என்று பரவலாக தெரிகிறது.

நம்முடைய சொந்த அனுபவத்திலும் உள்ளதால் அதனை வைத்து சொல்லுகிறேன். எனக்கு கடன் தேவைப்படும்பொழுது எல்லாம் நட்பு வட்டம் தான் செய்து இருக்கின்றது. உறவினர்கள் வட்டம் இரண்டாம் பட்சம் தான் கொடுக்கும்.

தற்பொழுது எல்லா இடத்திலும் நட்பு வட்டம் தான் இதனை செய்கிறது. உறவினர்களிடம் இருந்து கிடையாது என்று தான் சொல்ல வேண்டும். ஒரு மனிதனை உயர்த்துவதில் நட்பு வட்டம் தான் அதிகம் செய்கிறது. உறவினர்கள் நாம் இவனுக்கு செய்தால் இவன் முன்னேற்றம் அடைந்துவிடுவான் என்று ஒதுங்கிவிடுகின்றார்கள்.

கடன் நமக்கு கொடுப்பதை பொறுத்து தான் நம்முடைய மதிப்பு என்ன என்பது நமக்மே தெரியும். இது எல்லாம் கடவுளே நமக்கு கொடுக்கும் அனுபவம் என்பது தெரிகிறது. 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: