Followers

Tuesday, August 15, 2017

ஆறாவது ஸ்தானம்


வணக்கம்!
          ஆறாவது ஸ்தானம் பலப்படுவது நல்லது என்று சோதிட சாஸ்திரத்தில் சொல்லுவார்கள். ஆறாவது ஸ்தானம் பலப்படும்பொழுது சம்பந்தப்பட்ட ஜாதகர் துணிச்சலாக பல சாதனையை செய்து வாழ்வில் முன்னேற்றம் காண்பார்கள்.

வாழ்க்கையில் முன்னேற்றம் கண்டாலும் ஒரு விதத்தில் உஷாராக இருக்கவேண்டும். அவருக்கு வருகின்ற நோயில் உஷாராக இருக்கவேண்டும். நோய் இல்லை என்றாலும் திடீர் மரணம் வந்து ஜாதகரை தூக்கிவிடுவதும் உண்டு. நல்ல இருந்தவர் மரணம் அடைந்துவிட்டார் என்று சொல்லுவார்கள்.

ஒரு சிலர் மர்மநோய் தாக்கி கூட உயிர் இழப்பதும் ஆறாவதுவீடு பலப்படும்பொழுது தான் நடக்கிறது. எப்பொழுதும் ஆறாவதுவீட்டை மட்டும் கவனத்தில் கொண்டு செயல்படும்பொழுது வாழ்வில் நோய் இல்லாமல் இருக்கலாம்.

இல்லறத்தில் இருப்பவர்கள் உஷாராக இருக்கவேண்டும். அவர்களுக்கு கடமை என்பது நிறைய இருக்கின்றது. கடமையை செய்வதற்க்கு உடல் பலம் வேண்டும் அல்லவா அதனால் கவனித்துக்கொள்ளுங்கள். 

ஜாதகத்தை எடுத்து ஆறாவது வீடு எது அந்த வீட்டின் அதிபதி அதில் அமரும் கிரகம் அந்த வீட்டிற்க்கு கிடைக்கின்ற பார்வை அனைத்தையும் தெரிந்துவைத்துக்கொண்டால் நல்லது. வாழ்க்கையில் நோய் சண்டை சச்சரவு கடன் இல்லாமல் இருக்கலாம் அல்லவா அதனால் சொல்லுகிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: