Followers

Wednesday, August 30, 2017

கிரிவலம்


ணக்கம்!
          கிரிவலம் எல்லா நாட்களிலும் செல்லலாமா என்று கலைராஜன் அய்யா அவர்கள் கேட்டார்கள்.

சாதாரணமாக செல்லும் மனிதனுக்கு பெளர்ணமி மட்டும் கிரிவலம் செல்லலாம். பிரச்சினையோடு செல்பவர்கள் இருந்தால் அவர்கள் அடிக்கடி செல்லவேண்டும் என்பதால் சாதாரணமான நாளை தேர்ந்தெடுத்து செல்லலாம்.

ஒருவர் அதிகபிரச்சினையில் இருக்கும்பொழுது அவர் ஒரு வருடத்திற்க்கு நூறு தடவை செல்லவேண்டும் என்று ஒரு வேண்டுதல் வைக்கிறார் என்றால் அவர் நாளை பார்த்து செல்லமுடியாது. முடிந்தளவுக்கு எப்படி எல்லாம் செல்லமுடியுமே அந்தளவுக்கு கிரிவலம் செல்லவேண்டும்.

நூறு தடவை கிரிவலம் சாத்தியப்படக்கூடிய ஒன்றா என்று கேட்கலாம். எனக்கு தெரிந்த ஒருவர் ஒரு வருடத்திற்க்கு நூறு தடவை செல்லவேண்டும் என்ற ஒரு வேண்டுகோள் இருந்தது. அவர் ஒரு தடவை சென்றால் இரண்டு முறை கிரிவலம் சென்றுவிடுவார். ஒரு வருடத்தில் நூறு தடவை அவர் சென்றார் அது எனக்கு தெரியும்.

நீங்கள் நூறு தடவை எல்லாம் செல்லவேண்டாம். ஒரு வருடத்திற்க்கு குறைந்த எண்ணிக்கையில் வைத்துக்கொண்டு சென்றால் கூட உங்களுக்கு நல்லது நடக்கும் என்று அண்ணாமலையார் மீது நம்பிக்கையோடு சொல்லுகிறேன். உங்களின் விருப்பம் போல் சென்று வாருங்கள்.

ஒரு நாள் தான் செல்லமுடியும் என்றால் அங்கு விஷேசமாக உள்ள நாட்களை தேர்ந்தெடுத்து செல்லலாம். தனிமையாக செல்லவேண்டும் என்று விருப்பம் இருந்தால் சாதாரணமான நாளை தேர்ந்தெடுத்து செல்லுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

1 comment:

Kalairajan said...

நன்றி அய்யா