Followers

Saturday, October 14, 2017

சாபம் பித்ருதோஷம்


வணக்கம்!
         பித்ருதோஷம் என்பதும் சாபம் வாங்கியதும் ஒன்றா என்று நண்பர்கள் கேட்டனர். பித்ருதோஷம் என்பது வேறு சாபம் என்பது வேறு.

பித்ருதோஷம் மூன்று மற்றும் ஒன்பதாவது வீட்டை அடிப்படையாக வைத்து தான் சொல்லுவார்கள். இதில் சாபம் போல வேலை செய்யாது. பித்ருதோஷம் இருப்பவர்கள் வாழ்வில் நன்றாக முன்னேற்றம் காண்பீர்கள். 

சாபம் வாங்கிய ஜாதகம் என்பது குரு சுக்கிரனை அடிப்படையாக வைத்து சொல்லுவது. இந்த கிரகங்கள் அடிபடும்பொழுது உங்களின் வாழ்க்கை பெரிளவில் வராது. அதிக பிரச்சினைகளை கொண்ட வாழ்க்கையாக அமையும்.

பித்ருதோஷம் ராகு கேது அடிப்படையாக கொண்டது. இது கொஞ்ச காலம் பிரச்சினை தந்தாலும் கொஞ்சகாலத்திற்க்கு பிறகு நல்ல வாழ்க்கை அமையும். பெரும்பாலான ஜாதகத்தில் பித்ருதோஷம் வேலை செய்வதில்லை என்பது அனுபவத்தில் கண்டு இருக்கிறேன்.

பித்ருதோஷம் இருப்பவர்கள் திருமணம் செய்தால் அவர்களுக்கு மாமனார் உயிரோடு இருக்க மாட்டார். மாமியார் மட்டும் உயிரோடு இருப்பார். இப்படி அமைந்தால் அது பித்ருதோஷம் உள்ள ஜாதகம் என்று சொல்லலாம்.

சாபம் என்பது எந்தவித வழியும் தெரியாமல் இருப்பது. வழி கிடைக்காமால் இருக்கும் நபர்களுக்கு சாபம் வாங்கிய ஜாதகம் என்று பெயர். சூன்யவாழ்வு போல வாழ்ந்தால் அது சாபம் வாங்கியிருக்கிறது என்று பெயர். பித்ருதோஷத்தில் வாரிசுகள் இருக்கும். சாபத்தில் பெரும்பாலும் வாரிசுகள் இருக்காது. 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: